Saturday, 1 November 2014

ஆஸ்கர் தமிழன்

அல்லா ரக்கா ரகுமான்(A.R.Rahman),இவரைப் பற்றி தெரியாதவர் எவரும் இல்லை.இவர் ஒரு உலகமறிந்த இசையமைப்பாளர் ஆவார்.இவர் 1967 ஜனவரி 6ஆம் தேதி சென்னையில் ஆர்.கே.சேகர்-கரிமா(கஸ்தூரி) தம்பதியினர்க்கு பிறந்தார்.இவர் தந்தையும் இசையமைப்பாளர் ஆவார்.ரகுமானின் இயற்பெயர் திலிப் குமார் ஆகும்.அவருடைய ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார்.அதற்கு பிறகு இசைக் குழுக்கலில் சேர்ந்து இசையமைத்து கொண்டிருந்தார்.தன்னுடைய 23ஆவது வயதில் இஸ்லாம் மதத்திர்க்கு மாறி தன் பெயரை அல்லா ரக்கா ரகுமான் என மாற்றிகொண்டார்.இவர் முதலில் விளம்பரங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்தார்.1992ல் மணிரத்னம் அவர்கள் இயக்கிய படம்"ரோஜா"வில் இசையமைபாளராக அறிமுகம் ஆனார்.இவர் இசையமைத்த அனைத்து படப்பாடல்களும் பட்டிதொடிவரை அனைவராலும் விரும்பப்பட்டது.அதற்கு பிறகு இந்தி,மலையாலம்,தெலுங்கு போன்ற பிறமொழி படங்களுக்கும் இசையமைத்தார்.2009ல் இவர் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லியனர்(Slumdog Millionaire)படத்திற்காக ஆஸ்கர்(Oscar),கிராமி(Grammy)போன்ற உயரிய விருதுகளைப் பெற்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தார்.ஆஸ்கர் விருது வென்ற ஒரே தமிழர் இவர் மட்டுமே ஆவார்.

No comments:

Post a Comment