Monday, 23 February 2015

இசுபிங்சு (Sphinx)



இசுபிங்சு (Sphinx) என்பது, சிங்கத்தின் உடலும், செம்மறி ஆடு, மனிதன் ஆகியவற்றுள் ஒன்றின் தலையுடனும் கூடிய ஒரு உருவத்தைக் குறிக்கும். இது பண்டைய எகிப்தியர்களின் பழைய அரசுக்காலத்து உருவாக்கமாக இருந்தாலும், பண்பாட்டுத் தொடர்புகளினால் கிரேக்கத் தொன்மங்களிலும் இடம் பெற்றுள்ளது.



எகிப்திய இசுபிங்சு தொன்மம் சார்ந்த கற்பனைப் பிராணிகள் ஆகும். எகிப்திய சிற்ப மரபில் இவை காவலுக்கு உரியவையாகக் கருதப்படுகின்றன.

எகிப்தில் உள்ளவற்றில் பெரியவையும், புகழ் பெற்றவையுமான இசுபிங்சுகள் கீசாவில், நைல் நதியின் மேற்குக் கரையில், வடக்கு நோக்கியபடி, அமைந்து உள்ளதாகும். இதன் பாதங்களுக்கு இடையில் சிறிய கோயிலொன்றும் உள்ளது. கீசாவின் பெரிய இசுபிங்சின் தலை எகிப்திய ஃபாரோவான கஃப்ரா என்பவருடையது அல்லது அவருடைய தம்பியான ஜெடெஃப்ரா (Djedefra) என்பவருடையது எனக் கருதப்படுகின்றது. இதன் அடிப்படையில் இது நாலாம் மரபுவழிக் (கி.மு. 2723 - கி.மு. 2563) காலப்பகுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் இதன் கட்டுமானத்தை இன்னும் பழைய காலத்துக்குத் தள்ளும் எடுகோள்களும் உள்ளன.

Saturday, 31 January 2015

தாய்ப்பே 101




தாய்ப்பே 101 சின்யீ (Xìnyì) மாவட்டம், தாய்ப்பே, தாய்வான் நாட்டிலமைந்துள்ள, 106 மாடிகளைக் கொண்ட ஒரு வானளாவி ஆகும். ஆரம்பத்தில் இது, சீன மொழியிலுள்ள, உத்தியோகபூர்வப் பெயரான, தாய்ப்பே அனைத்துலக நிதியப் பெருங் கோபுரக் கட்டிடம் (Taipei International Financial Grand Tower-Building) என்ற பெயரை அடிப்படையாகக் கொண்ட, தாய்ப்பே நிதிய மையம் (Taipei Financial Center) என அழைக்கப்பட்டது.

அக்டோபர் 2003யில் கட்டி முடிக்கப்பட்டதிலிருந்து, துபாய், புர்ஜ் கலிஃபா கட்டடம் 2010 இல் கட்டப்படும் வரை இது உலகின் மிக உயர்ந்த கட்டடமாக இருந்தது. இது உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் நகர வாழிடங்களுக்கான கவுன்சில் (Council on Tall Buildings and Urban Habitat (CTBUH)) நியமித்துள்ள, உலகின் உயர்ந்த கட்டிடங்களுக்கான நான்கு பட்டங்களில் இரண்டை இக் கட்டிடம் பெற்றது. இது நிலமட்டத்துக்கு மேல் 101 மாடிகளையும், 5 நிலக்கீழ்த் தளங்களையும் உடையது.

Thursday, 29 January 2015

காந்திஜியின் நினைவு தினம்

தேசதந்தை என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மகாத்மா காந்தி அவர்களின் இறந்த தினம்(30 ஜனவரி 1948) இன்று.காந்தியின் கடைசி நாளான அன்று அவர் பிர்லா அரங்கத்திலிருந்து அபா காந்தி மற்றும் மனு காந்தியுடன்
வணங்குவதற்காக வெளியே வந்தார்.அப்பொழுது அவர் காலில் விழுந்து வணங்க நாதுராம் கோட்சே வந்தார்.வணங்கியவுடன் தன் துப்பாக்கியை எடுத்து காந்தியை நோக்கி சுடத்தொடங்கினார்.காந்தி "ஹே ராம்" என்று கூறிக்கொண்டே கீழேவிழுந்தார்.உடன் இருந்த சிலர் அவரை தாங்கிபிடித்து
அந்த அரங்கத்தின் உள்ளே கொண்டு சென்றனர்.காவலாளிகள் கோட்சேவை கைதுசெய்தனர்.சரியாக 5.40 மணியளவில் காந்தி இறந்தாக அறிவித்தனர்.ஆனால் காந்தி இன்னும் சாகவில்லை,மருத்துவர்கள் அவரைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கின்றனர் என்ற வதந்தி பரவ ஆரமித்தது.பின் 8 மணியளவில் காந்தி இறந்துவிட்டதாக நேரு அறிவித்தார்.காந்தியின் கொள்கையால் தான் அவரைக் கொன்றதாக கோட்சே வாக்குமூலம் கொடுத்தான்.

Tuesday, 27 January 2015

எலிபண்டா குகைகள்


Elephanta caves



எலிபண்டா குகைகள், மும்பாய் கரைக்கு அப்பால், மும்பாய்த் துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள காராப்புரி (Gharapuri) தீவில் அமைந்துள்ளன. போத்துக்கீசர் இத்தீவுக்கு எலிபண்டாத் தீவு எனப் பெயரிட்டனர். 1987 ஆம் ஆண்டில் இக் குகைகள் யுனெஸ்கோ உலக பண்பாட்டுக் களம் என அறிவிக்கப்பட்டது. பல உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இங்குள்ள சிற்பங்களைத் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு இலக்காகப் போத்துக்கீசர் பயன்படுத்தியதனால் பல சிற்பங்கள் சிதைக்கப்பட்டு உள்ளன.

இக் குகைகள் 9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு உட்பட்ட சில்காரா அரசர்களில் காலப் பகுதியைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இவ்விடத்தைச் சேர்ந்த சில சிற்பங்கள் ராஷ்டிரகூடர் காலத்தைச் சேர்ந்தவையாகவும் கருதப்படுகின்றன. எலிபண்டாவின் திரிமூர்த்தி சிலை எனப்படும் சிவன் சிலையின் மூன்று முகங்கள் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. இது ராஷ்டிரகூடர்களின் அரச சின்னமும் ஆகும். நடராசர், சதாசிவன் ஆகியோரின் புடைப்புச் சிற்பங்களும்,அர்த்தநாரீஸ்வரர் சிலைகளும் ராஷ்டிரகூடர் காலத்தைச் சேர்ந்த பிற கலைப் படைப்புக்களாகும்.

இக் குடைவரைக் கோயில் தொகுதி சுமார் 60,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்விடத்தில், அழகிய புடைப்புச் சிற்பங்களும், சிற்பங்களும், ஒரு சிவன் கோயிலும் உள்ளன. குகைகள் பாறையில் குடையப்பட்டுள்ளன.

Sunday, 25 January 2015

குடியரசு தினம்

இன்று இந்தியாவின் 66ஆவது குடியரசு தினம்.இந்தியா 26 ஜனவரி 1950  காலை 10:18 மணியளவில் அன்று தனது அரசியலமைப்பை உருவாக்கியது.இந்த அரசியலமைப்பை உருவாக்க கிட்டத்தட்ட 166 நாட்கள் ஆனது.ராஜெந்திர பிரசாத் அவர்கள் அரசு தர்பாரில் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார்.பின்னர் இர்வின் அரங்கத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.அப்பொழுது இந்தோனெசியாவின் ஜனாதிபதி சுகர்னோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.இந்திய அரசியலமைப்பு புத்தகத்தின் அசல் 2 மட்டுமே உள்ளது.ஒன்று ஆங்கிலத்திலும் மற்றொன்று இந்தியிலும் உள்ளது.அவை இந்திய பாராளுமன்றத்தில் பாதுகாக்கபட்டு வருகிறது.குடியரசு தின கொண்டாட்டம் 3 நாட்களுக்கு நடைபெரும்.கடைசி நாளில்"பீடிங் ரீட்ரிட்(Beating Retreat)"என்பர்.அன்று முப்படைகளின் பேண்டு வாத்திய அணிவகுப்பு நடக்கும்.குடியரசு தினத்தன்று தான் வீர் சக்ரா,பரம்வீர் சக்ரா போன்ற விருதுகள் வழங்கப்படும்.
  

தேசிய வாக்காளர் தினம்

அரசியல் செயல்பாட்டில் பங்கேற்க வேண்டும் மேலும் இளம் வாக்காளர்களின் ஊக்குவிக்கும் வகையில், இந்திய அரசு ஜனவரி 25 'தேசிய வாக்காளர்கள்' நாள் 'என ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட முடிவுசெய்தது . அதுகுறித்து ஆணைக்குழுவின் அடித்தளம்  ஜனவரி 25, 2011 ல் தொடங்கியது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம், இந்த விளைவு ஒரு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது,18 வயது அடைந்தவர்களுக்கு புதிய வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்ந்தன செய்து குறைந்த வட்டி காட்டும் என்று கவனித்து, அவர் அவர்கள் தங்கள் பதிவுச் நிலை சில நேரங்களில் 25 சதவீதம் 20 ஆக குறைந்த கூறினார்.
"திறம்பட இந்த பிரச்சினையை சமாளிக்க பொருட்டு, தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் 8.5 லட்சம் வாக்குச் சாவடிகள் ஒவ்வொரு ஆண்டும்  18 வயது அடைந்த அனைத்து தகுதியுள்ள வாக்காளர்கள் அடையாளம் ஒரு தீவிர உடற்பயிற்சி வரை எடுக்க முடிவு செய்துள்ளது, "என்று அவர் கூறினார்.இத்தகைய தகுதியுள்ள வாக்காளர்கள் நேரத்தில் சேர்ந்தார் மற்றும் ஜனவரி 25 ஒவ்வொரு ஆண்டும் தங்கள் தேர்தல் அட்டையை (EPIC) ஒப்படைக்கப்படலாம், சோனி இந்த முயற்சியை சேர்த்து இளைஞர் வலுவூட்டல், பெருமை ஒரு உணர்வு கொடுக்க அவர்களது உரிமையை அவர்களை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்றார் .
புதிய வாக்காளர்கள் அதன் முத்திரை கொண்ட ஒரு பேட்ஜ் வழங்கப்படும் என "ஒரு வாக்காளராக இருக்க பெருமை கொள்ளுங்கள் - வாக்களிக்க தயாராகுங்கள்",

Saturday, 24 January 2015

கொடி காத்த குமரன்

தமிழ்நாடு மாநிலத்தில் பல விடுதலைப் போராளிகள்  மற்றும் அவர்கள்
இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது வந்தனர். அவர்களில் பலர் சுதந்திரம் பெற தங்கள் வாழ்க்கையை கொடுத்தனர்.அவர்களில் ஒருவர் தான் திருப்பூர் குமரன்.அவர் திருப்பூர் மாவட்டத்தில் சென்னிமலை என்னும் ஊரில் 04-10-1904 அன்று பிறந்தார்.அவர் தன் நாடு சுதந்திரம் பெற பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் இருந்து இளைஞர்கள் மற்றும் இளம் நபர்கள் குழுக்கள் மூலம் "தேசம் பந்து இளைஞர் சங்கம்" தொடங்கினார். பல நபர்கள் ஊக்குவிக்கும் மற்றும் திருப்பூர் குமரன் கொண்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். இவர் தமிழகத்தின் பல இடங்களில் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக பல கண்டன ஊர்வலம் நடத்தினார்.அவர் இந்திய சுதந்திர இயக்கத்தின் காந்திஜி ஆலோசனையின் வழி நடந்தார்,தமிழ்நாடு மக்கள் எப்போதும் திருப்பூர் குமரன் என்ற பெயரில் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை நடத்துவதற்காக.திருப்பூர் குமரன் நினைவாலயம் சிலை திருப்பூர் ரயில்வே நிலையத்திற்கு மிக அருகில் இருக்கும் பூங்கா எழுப்பப்பட்டது. "குமரன் சாலை" என்று அழைக்கப்படும் நிறைய வீதிகள் உள்ளன.திருப்பூரில் அவர் பெயரில்"திருப்பூர் குமரன் கல்லூரி" உள்ளது.பிரபலமான சுதந்திர போராட்ட வீரர், திருப்பூர் குமரன், 1932ல் இறந்தார்.பிரிட்டிஷ் போலீஸ் காலனித்துவ அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய போது அவரை கொடூரமாக தாக்கினார்கள்.11 ஜனவரி அன்று இறந்தார். அவர் பிரிட்டிஷ் அரசாங்கம் தடை செய்யப்பட்ட இந்திய தேசியக் கொடியை ஏந்திய மரணமடைந்தார் என்றும் நாட்டுப்பற்று இருந்ததன் காரணமாக"கொடி காத்த குமரன்" என அழைக்கப்பட்டார்.