தேசதந்தை என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மகாத்மா காந்தி அவர்களின் இறந்த தினம்(30 ஜனவரி 1948) இன்று.காந்தியின் கடைசி நாளான அன்று அவர் பிர்லா அரங்கத்திலிருந்து அபா காந்தி மற்றும் மனு காந்தியுடன்
வணங்குவதற்காக வெளியே வந்தார்.அப்பொழுது அவர் காலில் விழுந்து வணங்க நாதுராம் கோட்சே வந்தார்.வணங்கியவுடன் தன் துப்பாக்கியை எடுத்து காந்தியை நோக்கி சுடத்தொடங்கினார்.காந்தி "ஹே ராம்" என்று கூறிக்கொண்டே கீழேவிழுந்தார்.உடன் இருந்த சிலர் அவரை தாங்கிபிடித்து
அந்த அரங்கத்தின் உள்ளே கொண்டு சென்றனர்.காவலாளிகள் கோட்சேவை கைதுசெய்தனர்.சரியாக 5.40 மணியளவில் காந்தி இறந்தாக அறிவித்தனர்.ஆனால் காந்தி இன்னும் சாகவில்லை,மருத்துவர்கள் அவரைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கின்றனர் என்ற வதந்தி பரவ ஆரமித்தது.பின் 8 மணியளவில் காந்தி இறந்துவிட்டதாக நேரு அறிவித்தார்.காந்தியின் கொள்கையால் தான் அவரைக் கொன்றதாக கோட்சே வாக்குமூலம் கொடுத்தான்.
No comments:
Post a Comment