Sunday, 25 January 2015

குடியரசு தினம்

இன்று இந்தியாவின் 66ஆவது குடியரசு தினம்.இந்தியா 26 ஜனவரி 1950  காலை 10:18 மணியளவில் அன்று தனது அரசியலமைப்பை உருவாக்கியது.இந்த அரசியலமைப்பை உருவாக்க கிட்டத்தட்ட 166 நாட்கள் ஆனது.ராஜெந்திர பிரசாத் அவர்கள் அரசு தர்பாரில் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார்.பின்னர் இர்வின் அரங்கத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.அப்பொழுது இந்தோனெசியாவின் ஜனாதிபதி சுகர்னோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.இந்திய அரசியலமைப்பு புத்தகத்தின் அசல் 2 மட்டுமே உள்ளது.ஒன்று ஆங்கிலத்திலும் மற்றொன்று இந்தியிலும் உள்ளது.அவை இந்திய பாராளுமன்றத்தில் பாதுகாக்கபட்டு வருகிறது.குடியரசு தின கொண்டாட்டம் 3 நாட்களுக்கு நடைபெரும்.கடைசி நாளில்"பீடிங் ரீட்ரிட்(Beating Retreat)"என்பர்.அன்று முப்படைகளின் பேண்டு வாத்திய அணிவகுப்பு நடக்கும்.குடியரசு தினத்தன்று தான் வீர் சக்ரா,பரம்வீர் சக்ரா போன்ற விருதுகள் வழங்கப்படும்.
  

No comments:

Post a Comment