Sunday, 21 September 2014

லூடுவிக் ஃவான் பேத்தோவன்



லூடுவிக் ஃவான் பேத்தோவன்
(Ludwig van Beethoven') அவர்கள் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மேற்கத்திய செவ்விசை இயற்றுநர் ஆவார். இவர் ஜெர்மனியில் உள்ள பான் என்னும் நகரில் பிறந்தார். இவர் பியானோ கருவிக்காகவும் பிற இசைக் கருவிகளுக்காகவும் சேர்ந்திசை நிகழ்வுகளுக்காகவும் பல செவ்விசை ஆக்கங்கள் செய்துள்ளார். இவர் ஒரு சிறந்த பியானோ வாசிக்கும் கலைஞரும், வயலின் வாசிக்கும் கலைஞரும் ஆவார். இவர் ஒரு சிறந்த இசை நடத்துநராகவும் இருந்தார். இவருடைய சிம்ஃவனி என்னும் ஒத்தினி இசையில் ஐந்தாவதும் ஒன்பதாவதும் மிகவும் புகழ் பெற்றதாகும். சுமார் 1801 ஆண்டு வாக்கில் இவருக்கு சிறுகச் சிறுக காது செவிடாகத் தொடங்கியது. 1817ல் இவர் முற்றுமாய் செவிடாகிவிட்டார். எனினும் இவர் இக்காலத்தே மிகவும் சிறந்த இசை ஆக்கங்களைச் செய்துள்ளார்.

இவர் 1792ல் மேற்கத்திய இசைக்குப் புகழ் பெற்ற வியன்னா நகருக்குச் சென்று அங்கு வாழத் தொடங்கினார். இவர் திருமணமே செய்துகொள்ளவில்லை. இவர் கடைசியில் வியன்னா நகரிலேயே 1827ல் இறந்தார்.


No comments:

Post a Comment