Thursday, 30 October 2014

நோபல் பரிசுபெற்ற இந்தியர்"வெங்கட்ராமன்"

வெங்கட்ராமன் "வெங்கி" ராமகிருஷ்ணன் (1952ல் பிறந்தார்) ரைபோசோம் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் பற்றி ஆய்வுகள் மேற்கொண்டார்,தாமஸ் ஏ ஸ்டெய்ட்ஸ்  மற்றும் அடா ஈ யோனத்  உடன் வேதியியலில் 2009ல் நோபல் பரிசை பகிர்ந்துகொண்டார்.இவர் ஒரு அமெரிக்கவாழ் இந்தியர்,அவர் தற்போது கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து MRC ஆய்வுக்கூடம் மூலக்கூறு உயிரியலில் தனது ஆராய்ச்சியை தொடர்கிறார்.ராமகிருஷ்ணன்  சி.வி. ராமகிருஷ்ணன் மற்றும் ஆர்.ராஜலட்சுமி தம்பதியினற்கு,இந்தியாவின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிறந்தார். அவரது பெற்றோர்கள் இருவரும் விஞ்ஞானிகளாக இருந்தனர்.

Wednesday, 29 October 2014

உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) ஐக்கிய நாடுகளின் ஓர் அமைப்பாகும். இந்நிறுவனம் அனைத்துலக பொதுச் சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது. ஏப்ரல் 7, 1948ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில்அமைந்துள்ளது. இந்த அமைப்பானது ஐக்கிய நாடுகளின் முன்னோடியான லீக் ஒப் நேஷன்ஸ் என்கின்ற அமைப்பு இருந்தபோது இருந்த சுகாதார அமைப்பின் வழிவந்ததாகும்.

Tuesday, 28 October 2014

ஜோனாஸ் எட்வர்ட் சால்க்

ஜோனாஸ் எட்வர்ட் சால்க்(அக்டோபர் 28, 1914 - 1995 ஜூன் 23) ஒரு அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர் மற்றும் வைராலஜிஸ்ட். அவர்தான் முதல் வெற்றிகரமான  போலியோ மருந்தை உருவாக்கினார். அவர் யூத பெற்றோருக்கு நியூயார்க் நகரில் பிறந்தார். அவர்கள் சிறிய முறையான கல்வி இருந்தது என்றாலும், அவரது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெற்றி பார்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். மருத்துவம், நியூயார்க் பல்கலைக்கழகம் பள்ளியில் பயின்றார்.இன்று அவருடைய பிறந்த தினம்.

Monday, 27 October 2014

மேதா பட்கர்



மேதா பட்கர் (திசம்பர் 1, 1954) இந்தியாவில் பரவலாக அறிந்த குமுக உரிமைப் போராளி. குசராத் மாநிலத்தில் உள்ள நர்மதா ஆற்றில் கட்டப்படும் சர்தார் சரோவர் அணைக்கு எதிராக மக்கள் சார்பாக உரிமைக்குரல் நிறுவனமான நர்மதா பச்சாவோ அந்தோளன் என்னும் அமைப்பால் நன்கு அறியப்பட்டவர்.


மேதா பட்கர் 1991 ஆம் ஆண்டுக்கான ரைட் லைவ்லிஃகூடு பரிசு (Right Livelihood Award) பெற்றார். 1999 ஆம் ஆண்டு விச்யில் இந்தியா இயக்கம் (Vigil India Movement) நிறுவனத்தின் எம்.ஏ. தாமசு மனித உரிமைப் பரிசு (M.A.Thomas National Human Rights Award) பெற்றார். இவை தவிர பற்பல பரிசுகளும் பெருமைகளும் பெற்றுள்ளார். அவற்றுள் தீனா நாத் மங்கேழ்ச்கர் பரிசி (Deena Nath Mangeshkar Award), மகாத்மா பூலே பரிசு (Mahatma Phule Award), கோல்டுமன் சூழல்நலப் பரிசு (Goldman Environment Prize) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவர் அணைகளுக்கான உலக ஆணையம் (World Commission on Dams) என்பதன் ஆணையர். ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக வடகிழக்கு மும்பைத் தொகுதியில் நாடாளுமன்றத்தேர்தலுக்குப் (2014) போட்டியிடுகிறார்.


Saturday, 18 October 2014

கைலாசு சத்யார்த்தி



கைலாசு சத்யார்த்தி (பிறப்பு 11 சனவரி 1954) இந்திய சிறுவர் உரிமைகளுக்கான செயற்பாட்டாளரும் அமைதிக்கான நோபல் பரிசு வாகையாளரும் ஆவார். 1990 களிலிருந்து சிறுவர்களை தொழிலாளர்களாகப் பணிப்பதை எதிராகப் போராடி வருகிறார். இவரது அமைப்பு பச்பன் பச்சாவ் அந்தோலன், (இளமையைக் காப்பாற்று இயக்கம்) 80,000கும் மேற்பட்ட சிறுவர்களை பல்வேறு வகை சேவைப்பணிகளிலிருந்து தடுத்து அவர்களது மீள்வாழ்வு, மீளிணைப்பு மற்றும் கல்விக்கு வழிவகுத்துள்ளது.2014 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு மலாலா யூசப்சையி உடன் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளார்.

இவர்தம் சீரியப் பணிக்கு தேசிய, பன்னாட்டு விருதுகளைப் பெற்றுள்ளார்.



Wednesday, 15 October 2014

கொனார்க் சூரியன் கோவில்

கொனார்க் சூரியன் கோவில் (Konark Sun Temple) இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ளது. இக்கோவில் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில் சிவப்பு மணற்பாறைகளாலும் கருப்பு கிரானைட் கற்களாலும் கட்டப்பட்டது. கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர்வடிவ சூரியன் கோவில். இது கிழக்கு கங்க வம்சத்தைச் சேர்ந்த முதலாம் நரசிம்ம தேவன் என்ற மன்னனால் உருவாக்கப்பட்டது. "இங்கே, கல்லின்மொழி மனிதனின் மொழியை தாண்டிச்செல்கிறது" என்று வியந்து கூறியிருக்கிறார், மகாகவி ரவீந்திரநாத் தாகூர். இப்படி அவரை வியக்க வைத்தவை, கொனார்க் சூரியபகவான் கோவில் சிற்பங்கள். இந்தியாவில் சூரியபகவானுக்காக அமைக்கப்பட்டு எஞ்சி நிற்கும் கோவில் கொனார்க் சூரியக்கோவில் மட்டுமே. சிறப்புக்குரிய இந்தக் கோவிலை யுனெஸ்கோ அமைப்பு 'உலகப் பண்பாட்டுச் சின்னமாக' 1984ம் ஆண்டில் அறிவித்தது. கோவிலை சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.



Friday, 10 October 2014

அந்தீசு மலைத்தொடர்

அந்தீசு மலைத்தொடர் (Andes) உலகின் மிக நீளமான மலைத் தொடர் ஆகும். இது, தென் அமெரிக்காவின், மேற்குக் கரையோரமாகத் தொடரான உயர்நிலப் பகுதியை உருவாக்குகின்றது. 7,000 கி.மீ (4,400 மைல்கள்) நீளமும், சில பகுதிகளில் 500 கி.மீ வரை அகலமும் கொண்ட ஆண்டீய மலைத்தொடர் சராசரியாக 4,000 மீட்டர் உயரமானது. நில கிடைவரைக் கோடுகள் தெற்கு 18° முதல் 20° வரையில் உள்ள பகுதிகள் மிக அகலமானவை அந்தீசு மலைத்தொடரில் மிகவும் உயரமான மலை முகடுஅக்கோன்காகுவா (உயரம் 6,962 மீ) ஆகும். இமயமலைத் தொடருக்கு அடுத்தாற்போல் உலகிலேயே அதிக உயரமான மலைகள் இந்த அந்தீசு மலைத்தொடரில்தான் உள்ளன. உயரத்தில் இமயமலையை நெருங்க முடியாவிட்டாலும், நீளத்தில் இம்மலைத்தொடர் இமயமலைத்தொடரைப்போல இரு மடங்கு நீளமானது. அகலத்திலும் இமயமலைத்தொடருக்கு ஈடாக நிற்பது. அந்தீசு மலைத்தொடரானது தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினா, பொலிவியா, சிலி, கொலம்பியா, ஈக்வெடோர்,பெரு,வெனிசூயெலா ஆகிய ஏழு நாடுகள் ஊடாக எழுந்து நிற்கின்றது. உயர்மலைகளைக் கொண்ட இந்நாடுகளை அந்தீசு நாடுகள் என்று அழைப்பதும் வழக்கம்.


ஆர். கே. நாராயணன்



ஆர். கே. நாராயணன் (ஆர். கே. நாராயண்) என்னும் ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணசாமி (10 அக்டோபர் 1906-13 மே 2001) உலக அளவில் புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர், இந்திய நாவல் ஆசிரியர் ஆவார். பிரபல கார்டூனிஸ்ட் ஆர். கே. லஷ்மண் இவரது தம்பியாவார்.

இவரின் உணர்ச்சிப்பூர்வமான நாவல்கள் 20 ஆம் நூற்றாண்டு இந்தியரின் வாழ்கையைப் பிரதிபலிக்கும் மால்குடி எனும் கற்பனைக் கிராமத்தைத் தழுவி எழுதப்பட்டவையாகும். முல்க் ராஜ் ஆனந்த் மற்றும் ராஜா ராவ் ஆகியோருடன் இவர் 20 ஆம் நூற்றாண்டின் மூன்று சிறந்த இந்திய-ஆங்கில மொழி எழுத்தாளர்களில் ஒருவர்.

எழுத்தில் மால்குடி என்ற கற்பனை நகரை உருவாக்கி, உலகம் முழுவதும் உள்ள வாசகர்களை ரசிக்க வைத்தவர். கிரஹாம் கிரீன், ஈ.எம். பாஸ்டர், சோமர் செட் மாம், மால்கம் முகரிட்ஜ் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் இவரது ரசிகர்கள். பல சிறு கதைகளும், புதினங்களில் உள்ள பகுதிகளும் தொலைக்காட்சி நாடகங்களாக நடிக்கப்பட்டன.கைடு (வழிகாட்டி) புதினத்திற்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. இவ்விருது பெற்ற முதல் ஆங்கில நூல் இதுதான். 1964 ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. நோபல் பரிசுக்காக இருமுறை பரிந்துரைக்கப்பட்டவர்.





Thursday, 9 October 2014

டைட்டானிக்

டைட்டானிக்,இந்த  உலகின் மிக பிரம்மண்டமான கப்பல் மற்றும் அதை தழுவி வந்த மாபெரும் வெற்றிபடத்தையும் அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது.அவ்வளவு பெரிய கப்பலை எளிதாக முழ்கடித்துவிட்டது ஒரு பனிப்பாறை.அதில் பயனம் செய்த மக்களின் உயிரையும் பறித்துக்கொண்டது.அதில் போதிய அளவு உயிர் காக்கும் படகுகள் இல்லாததே அத்தனை பேரின் உயிர் இழப்பிற்கு காரணம்.டைட்டானிக் கப்பலை விட அந்த படத்தை தயாரிப்பதற்கு தான் அதிகம் செலவு ஆகியுள்ளது.கப்பல் முழ்குவதில் இருந்து உயிர் பிழைத்த ஜப்பானியர்களை அன்னாட்டு மக்கள் கோழை என்று அழைக்கிறார்கள்.

Wednesday, 8 October 2014

இராஜ நாகம்

இராஜ நாகம்,உலகிலேயே மிகப்பெரிய விஷப்பாம்பாகும்.இது சாதாரனமாக 6 அடி வரை வளரக்கூடியது ஆகும்.இந்த ஒரு இனம் மட்டும்தான் மற்ற பாம்பு வகைகளைக் கொன்று சாப்பிடும்.அதில் விஷப்பாம்புகளும் அடங்கும்.இதனுடைய விஷம் ஒரு யானையை கொல்லும் அளவுக்கு மிகக்கொடியது.மற்ற பாம்பு வகைகளைப் போன்று இவைகளும் தங்களுடைய விஷ அளவைக் கட்டுபடுத்தும் திறன் கொண்டது.இவைகள் சில நேரம் தங்களுடைய விஷத்தை மனிதன்மீது செலுத்தாமல் கூட போகலாம்.இவைகள் கூடு கட்டி தங்கள் குட்டிகளைப் பாதுகாக்கும்.


Tuesday, 7 October 2014

பனாமாவின் கோல்டன் தவளை

தவளையின் ஒரு அற்புதமான இனங்களிலொன்று பனாமாவின் கோல்டன் தவளை.இவற்றிற்கு காதுகள் கிடையாது.அதற்கு பதிலாக அவைகள் தங்கள் நுரையீரல் உதவியுடன் கேட்கும் ஆமாம், அந்த நுரையீரல் மிக அற்புதமான வழியில் அவர்களுக்கு பல பணிகளை செய்கிறது.. இந்த தவளைகள்மட்டுமே அதே செயல்பாடு கொண்டவை அல்ல, அதே முறையில் கேட்கும் திறன் கொண்ட   பல மீன்களும் உள்ளன.

Wednesday, 1 October 2014

பாபிலோனின் தொங்கும் தோட்டம்



பாபிலோனின் தொங்கும் தோட்டம் (Hanging Gardens of Babylon) (செமிராமிஸின் தொங்கு தோட்டம் எனவும் அறியப்படுகிறது) பாபிலோனின் சுவர்களும் பண்டைய ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவ்விரண்டும் நெபுச்சட்னெசாரால் (Nebuchadnezzar) தற்போதைய ஈராக் நாட்டினுள் அடங்கும் பாபிலோனில் கி.மு 600அளவில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. எனினும் இது உண்மையிலேயே இருந்ததா என்பது பற்றிய சந்தேகமும் இன்னும் உள்ளது.

ஸ்ட்ராபோ (Strabo), டையோடோரஸ் சிகுலஸ் (Diodorus Siculus) போன்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர்களால் விரிவாகப் பதியப்பட்டுள்ள இத் தொங்கு தோட்டம் இருந்தது பற்றி, பாபிலோனிலிருந்த மாளிகையில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மேலோட்டமான சில சான்றுகள் தவிர, வேறு சான்றுகள் மிகக் குறைவாகவேயுள்ளன. இது பற்றிய வியத்தகு விவரணங்களை நியாயப்படுத்தக் கூடிய போதிய சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை.