கைலாசு சத்யார்த்தி (பிறப்பு 11 சனவரி 1954) இந்திய சிறுவர் உரிமைகளுக்கான செயற்பாட்டாளரும் அமைதிக்கான நோபல் பரிசு வாகையாளரும் ஆவார். 1990 களிலிருந்து சிறுவர்களை தொழிலாளர்களாகப் பணிப்பதை எதிராகப் போராடி வருகிறார். இவரது அமைப்பு பச்பன் பச்சாவ் அந்தோலன், (இளமையைக் காப்பாற்று இயக்கம்) 80,000கும் மேற்பட்ட சிறுவர்களை பல்வேறு வகை சேவைப்பணிகளிலிருந்து தடுத்து அவர்களது மீள்வாழ்வு, மீளிணைப்பு மற்றும் கல்விக்கு வழிவகுத்துள்ளது.2014 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு மலாலா யூசப்சையி உடன் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளார்.
இவர்தம் சீரியப் பணிக்கு தேசிய, பன்னாட்டு விருதுகளைப் பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment