Friday, 10 October 2014

ஆர். கே. நாராயணன்



ஆர். கே. நாராயணன் (ஆர். கே. நாராயண்) என்னும் ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணசாமி (10 அக்டோபர் 1906-13 மே 2001) உலக அளவில் புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர், இந்திய நாவல் ஆசிரியர் ஆவார். பிரபல கார்டூனிஸ்ட் ஆர். கே. லஷ்மண் இவரது தம்பியாவார்.

இவரின் உணர்ச்சிப்பூர்வமான நாவல்கள் 20 ஆம் நூற்றாண்டு இந்தியரின் வாழ்கையைப் பிரதிபலிக்கும் மால்குடி எனும் கற்பனைக் கிராமத்தைத் தழுவி எழுதப்பட்டவையாகும். முல்க் ராஜ் ஆனந்த் மற்றும் ராஜா ராவ் ஆகியோருடன் இவர் 20 ஆம் நூற்றாண்டின் மூன்று சிறந்த இந்திய-ஆங்கில மொழி எழுத்தாளர்களில் ஒருவர்.

எழுத்தில் மால்குடி என்ற கற்பனை நகரை உருவாக்கி, உலகம் முழுவதும் உள்ள வாசகர்களை ரசிக்க வைத்தவர். கிரஹாம் கிரீன், ஈ.எம். பாஸ்டர், சோமர் செட் மாம், மால்கம் முகரிட்ஜ் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் இவரது ரசிகர்கள். பல சிறு கதைகளும், புதினங்களில் உள்ள பகுதிகளும் தொலைக்காட்சி நாடகங்களாக நடிக்கப்பட்டன.கைடு (வழிகாட்டி) புதினத்திற்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. இவ்விருது பெற்ற முதல் ஆங்கில நூல் இதுதான். 1964 ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. நோபல் பரிசுக்காக இருமுறை பரிந்துரைக்கப்பட்டவர்.





No comments:

Post a Comment