Monday, 27 October 2014

மேதா பட்கர்



மேதா பட்கர் (திசம்பர் 1, 1954) இந்தியாவில் பரவலாக அறிந்த குமுக உரிமைப் போராளி. குசராத் மாநிலத்தில் உள்ள நர்மதா ஆற்றில் கட்டப்படும் சர்தார் சரோவர் அணைக்கு எதிராக மக்கள் சார்பாக உரிமைக்குரல் நிறுவனமான நர்மதா பச்சாவோ அந்தோளன் என்னும் அமைப்பால் நன்கு அறியப்பட்டவர்.


மேதா பட்கர் 1991 ஆம் ஆண்டுக்கான ரைட் லைவ்லிஃகூடு பரிசு (Right Livelihood Award) பெற்றார். 1999 ஆம் ஆண்டு விச்யில் இந்தியா இயக்கம் (Vigil India Movement) நிறுவனத்தின் எம்.ஏ. தாமசு மனித உரிமைப் பரிசு (M.A.Thomas National Human Rights Award) பெற்றார். இவை தவிர பற்பல பரிசுகளும் பெருமைகளும் பெற்றுள்ளார். அவற்றுள் தீனா நாத் மங்கேழ்ச்கர் பரிசி (Deena Nath Mangeshkar Award), மகாத்மா பூலே பரிசு (Mahatma Phule Award), கோல்டுமன் சூழல்நலப் பரிசு (Goldman Environment Prize) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவர் அணைகளுக்கான உலக ஆணையம் (World Commission on Dams) என்பதன் ஆணையர். ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக வடகிழக்கு மும்பைத் தொகுதியில் நாடாளுமன்றத்தேர்தலுக்குப் (2014) போட்டியிடுகிறார்.


No comments:

Post a Comment