Monday, 23 February 2015

இசுபிங்சு (Sphinx)



இசுபிங்சு (Sphinx) என்பது, சிங்கத்தின் உடலும், செம்மறி ஆடு, மனிதன் ஆகியவற்றுள் ஒன்றின் தலையுடனும் கூடிய ஒரு உருவத்தைக் குறிக்கும். இது பண்டைய எகிப்தியர்களின் பழைய அரசுக்காலத்து உருவாக்கமாக இருந்தாலும், பண்பாட்டுத் தொடர்புகளினால் கிரேக்கத் தொன்மங்களிலும் இடம் பெற்றுள்ளது.



எகிப்திய இசுபிங்சு தொன்மம் சார்ந்த கற்பனைப் பிராணிகள் ஆகும். எகிப்திய சிற்ப மரபில் இவை காவலுக்கு உரியவையாகக் கருதப்படுகின்றன.

எகிப்தில் உள்ளவற்றில் பெரியவையும், புகழ் பெற்றவையுமான இசுபிங்சுகள் கீசாவில், நைல் நதியின் மேற்குக் கரையில், வடக்கு நோக்கியபடி, அமைந்து உள்ளதாகும். இதன் பாதங்களுக்கு இடையில் சிறிய கோயிலொன்றும் உள்ளது. கீசாவின் பெரிய இசுபிங்சின் தலை எகிப்திய ஃபாரோவான கஃப்ரா என்பவருடையது அல்லது அவருடைய தம்பியான ஜெடெஃப்ரா (Djedefra) என்பவருடையது எனக் கருதப்படுகின்றது. இதன் அடிப்படையில் இது நாலாம் மரபுவழிக் (கி.மு. 2723 - கி.மு. 2563) காலப்பகுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் இதன் கட்டுமானத்தை இன்னும் பழைய காலத்துக்குத் தள்ளும் எடுகோள்களும் உள்ளன.

Saturday, 31 January 2015

தாய்ப்பே 101




தாய்ப்பே 101 சின்யீ (Xìnyì) மாவட்டம், தாய்ப்பே, தாய்வான் நாட்டிலமைந்துள்ள, 106 மாடிகளைக் கொண்ட ஒரு வானளாவி ஆகும். ஆரம்பத்தில் இது, சீன மொழியிலுள்ள, உத்தியோகபூர்வப் பெயரான, தாய்ப்பே அனைத்துலக நிதியப் பெருங் கோபுரக் கட்டிடம் (Taipei International Financial Grand Tower-Building) என்ற பெயரை அடிப்படையாகக் கொண்ட, தாய்ப்பே நிதிய மையம் (Taipei Financial Center) என அழைக்கப்பட்டது.

அக்டோபர் 2003யில் கட்டி முடிக்கப்பட்டதிலிருந்து, துபாய், புர்ஜ் கலிஃபா கட்டடம் 2010 இல் கட்டப்படும் வரை இது உலகின் மிக உயர்ந்த கட்டடமாக இருந்தது. இது உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் நகர வாழிடங்களுக்கான கவுன்சில் (Council on Tall Buildings and Urban Habitat (CTBUH)) நியமித்துள்ள, உலகின் உயர்ந்த கட்டிடங்களுக்கான நான்கு பட்டங்களில் இரண்டை இக் கட்டிடம் பெற்றது. இது நிலமட்டத்துக்கு மேல் 101 மாடிகளையும், 5 நிலக்கீழ்த் தளங்களையும் உடையது.

Thursday, 29 January 2015

காந்திஜியின் நினைவு தினம்

தேசதந்தை என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மகாத்மா காந்தி அவர்களின் இறந்த தினம்(30 ஜனவரி 1948) இன்று.காந்தியின் கடைசி நாளான அன்று அவர் பிர்லா அரங்கத்திலிருந்து அபா காந்தி மற்றும் மனு காந்தியுடன்
வணங்குவதற்காக வெளியே வந்தார்.அப்பொழுது அவர் காலில் விழுந்து வணங்க நாதுராம் கோட்சே வந்தார்.வணங்கியவுடன் தன் துப்பாக்கியை எடுத்து காந்தியை நோக்கி சுடத்தொடங்கினார்.காந்தி "ஹே ராம்" என்று கூறிக்கொண்டே கீழேவிழுந்தார்.உடன் இருந்த சிலர் அவரை தாங்கிபிடித்து
அந்த அரங்கத்தின் உள்ளே கொண்டு சென்றனர்.காவலாளிகள் கோட்சேவை கைதுசெய்தனர்.சரியாக 5.40 மணியளவில் காந்தி இறந்தாக அறிவித்தனர்.ஆனால் காந்தி இன்னும் சாகவில்லை,மருத்துவர்கள் அவரைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கின்றனர் என்ற வதந்தி பரவ ஆரமித்தது.பின் 8 மணியளவில் காந்தி இறந்துவிட்டதாக நேரு அறிவித்தார்.காந்தியின் கொள்கையால் தான் அவரைக் கொன்றதாக கோட்சே வாக்குமூலம் கொடுத்தான்.

Tuesday, 27 January 2015

எலிபண்டா குகைகள்


Elephanta caves



எலிபண்டா குகைகள், மும்பாய் கரைக்கு அப்பால், மும்பாய்த் துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள காராப்புரி (Gharapuri) தீவில் அமைந்துள்ளன. போத்துக்கீசர் இத்தீவுக்கு எலிபண்டாத் தீவு எனப் பெயரிட்டனர். 1987 ஆம் ஆண்டில் இக் குகைகள் யுனெஸ்கோ உலக பண்பாட்டுக் களம் என அறிவிக்கப்பட்டது. பல உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இங்குள்ள சிற்பங்களைத் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு இலக்காகப் போத்துக்கீசர் பயன்படுத்தியதனால் பல சிற்பங்கள் சிதைக்கப்பட்டு உள்ளன.

இக் குகைகள் 9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு உட்பட்ட சில்காரா அரசர்களில் காலப் பகுதியைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இவ்விடத்தைச் சேர்ந்த சில சிற்பங்கள் ராஷ்டிரகூடர் காலத்தைச் சேர்ந்தவையாகவும் கருதப்படுகின்றன. எலிபண்டாவின் திரிமூர்த்தி சிலை எனப்படும் சிவன் சிலையின் மூன்று முகங்கள் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. இது ராஷ்டிரகூடர்களின் அரச சின்னமும் ஆகும். நடராசர், சதாசிவன் ஆகியோரின் புடைப்புச் சிற்பங்களும்,அர்த்தநாரீஸ்வரர் சிலைகளும் ராஷ்டிரகூடர் காலத்தைச் சேர்ந்த பிற கலைப் படைப்புக்களாகும்.

இக் குடைவரைக் கோயில் தொகுதி சுமார் 60,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்விடத்தில், அழகிய புடைப்புச் சிற்பங்களும், சிற்பங்களும், ஒரு சிவன் கோயிலும் உள்ளன. குகைகள் பாறையில் குடையப்பட்டுள்ளன.

Sunday, 25 January 2015

குடியரசு தினம்

இன்று இந்தியாவின் 66ஆவது குடியரசு தினம்.இந்தியா 26 ஜனவரி 1950  காலை 10:18 மணியளவில் அன்று தனது அரசியலமைப்பை உருவாக்கியது.இந்த அரசியலமைப்பை உருவாக்க கிட்டத்தட்ட 166 நாட்கள் ஆனது.ராஜெந்திர பிரசாத் அவர்கள் அரசு தர்பாரில் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார்.பின்னர் இர்வின் அரங்கத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.அப்பொழுது இந்தோனெசியாவின் ஜனாதிபதி சுகர்னோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.இந்திய அரசியலமைப்பு புத்தகத்தின் அசல் 2 மட்டுமே உள்ளது.ஒன்று ஆங்கிலத்திலும் மற்றொன்று இந்தியிலும் உள்ளது.அவை இந்திய பாராளுமன்றத்தில் பாதுகாக்கபட்டு வருகிறது.குடியரசு தின கொண்டாட்டம் 3 நாட்களுக்கு நடைபெரும்.கடைசி நாளில்"பீடிங் ரீட்ரிட்(Beating Retreat)"என்பர்.அன்று முப்படைகளின் பேண்டு வாத்திய அணிவகுப்பு நடக்கும்.குடியரசு தினத்தன்று தான் வீர் சக்ரா,பரம்வீர் சக்ரா போன்ற விருதுகள் வழங்கப்படும்.
  

தேசிய வாக்காளர் தினம்

அரசியல் செயல்பாட்டில் பங்கேற்க வேண்டும் மேலும் இளம் வாக்காளர்களின் ஊக்குவிக்கும் வகையில், இந்திய அரசு ஜனவரி 25 'தேசிய வாக்காளர்கள்' நாள் 'என ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட முடிவுசெய்தது . அதுகுறித்து ஆணைக்குழுவின் அடித்தளம்  ஜனவரி 25, 2011 ல் தொடங்கியது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம், இந்த விளைவு ஒரு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது,18 வயது அடைந்தவர்களுக்கு புதிய வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்ந்தன செய்து குறைந்த வட்டி காட்டும் என்று கவனித்து, அவர் அவர்கள் தங்கள் பதிவுச் நிலை சில நேரங்களில் 25 சதவீதம் 20 ஆக குறைந்த கூறினார்.
"திறம்பட இந்த பிரச்சினையை சமாளிக்க பொருட்டு, தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் 8.5 லட்சம் வாக்குச் சாவடிகள் ஒவ்வொரு ஆண்டும்  18 வயது அடைந்த அனைத்து தகுதியுள்ள வாக்காளர்கள் அடையாளம் ஒரு தீவிர உடற்பயிற்சி வரை எடுக்க முடிவு செய்துள்ளது, "என்று அவர் கூறினார்.இத்தகைய தகுதியுள்ள வாக்காளர்கள் நேரத்தில் சேர்ந்தார் மற்றும் ஜனவரி 25 ஒவ்வொரு ஆண்டும் தங்கள் தேர்தல் அட்டையை (EPIC) ஒப்படைக்கப்படலாம், சோனி இந்த முயற்சியை சேர்த்து இளைஞர் வலுவூட்டல், பெருமை ஒரு உணர்வு கொடுக்க அவர்களது உரிமையை அவர்களை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்றார் .
புதிய வாக்காளர்கள் அதன் முத்திரை கொண்ட ஒரு பேட்ஜ் வழங்கப்படும் என "ஒரு வாக்காளராக இருக்க பெருமை கொள்ளுங்கள் - வாக்களிக்க தயாராகுங்கள்",

Saturday, 24 January 2015

கொடி காத்த குமரன்

தமிழ்நாடு மாநிலத்தில் பல விடுதலைப் போராளிகள்  மற்றும் அவர்கள்
இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது வந்தனர். அவர்களில் பலர் சுதந்திரம் பெற தங்கள் வாழ்க்கையை கொடுத்தனர்.அவர்களில் ஒருவர் தான் திருப்பூர் குமரன்.அவர் திருப்பூர் மாவட்டத்தில் சென்னிமலை என்னும் ஊரில் 04-10-1904 அன்று பிறந்தார்.அவர் தன் நாடு சுதந்திரம் பெற பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் இருந்து இளைஞர்கள் மற்றும் இளம் நபர்கள் குழுக்கள் மூலம் "தேசம் பந்து இளைஞர் சங்கம்" தொடங்கினார். பல நபர்கள் ஊக்குவிக்கும் மற்றும் திருப்பூர் குமரன் கொண்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். இவர் தமிழகத்தின் பல இடங்களில் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக பல கண்டன ஊர்வலம் நடத்தினார்.அவர் இந்திய சுதந்திர இயக்கத்தின் காந்திஜி ஆலோசனையின் வழி நடந்தார்,தமிழ்நாடு மக்கள் எப்போதும் திருப்பூர் குமரன் என்ற பெயரில் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை நடத்துவதற்காக.திருப்பூர் குமரன் நினைவாலயம் சிலை திருப்பூர் ரயில்வே நிலையத்திற்கு மிக அருகில் இருக்கும் பூங்கா எழுப்பப்பட்டது. "குமரன் சாலை" என்று அழைக்கப்படும் நிறைய வீதிகள் உள்ளன.திருப்பூரில் அவர் பெயரில்"திருப்பூர் குமரன் கல்லூரி" உள்ளது.பிரபலமான சுதந்திர போராட்ட வீரர், திருப்பூர் குமரன், 1932ல் இறந்தார்.பிரிட்டிஷ் போலீஸ் காலனித்துவ அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய போது அவரை கொடூரமாக தாக்கினார்கள்.11 ஜனவரி அன்று இறந்தார். அவர் பிரிட்டிஷ் அரசாங்கம் தடை செய்யப்பட்ட இந்திய தேசியக் கொடியை ஏந்திய மரணமடைந்தார் என்றும் நாட்டுப்பற்று இருந்ததன் காரணமாக"கொடி காத்த குமரன்" என அழைக்கப்பட்டார்.

Thursday, 22 January 2015

வேலு நாச்சியார்


velu nachiyar history in tamil language and images

இராமநாதபுரம் மன்னர் (1749-62) செல்லமுத்து சேதுபதி, சிவகங்கைக்கு அருகிலுள்ள 'சக்கந்தி” என்னும் ஊரைச் சேர்ந்த முத்தாத்தாள் நாச்சியார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஓர் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அவர்கள் அக்குழந்தைக்கு வேலு நாச்சியார் எனப் பெயரிட்டார்கள். செல்லமுத்து சேதுபதி தனது மகள் வேலு நாச்சியாரைக் கல்வி - கேள்விகளில் சிறந்தவராக வளர்த்து ஆளாக்கினார். வேலு நாச்சியார் போர்க்களம் சென்று, வாளெடுத்துப் போர் புரியும் ஆற்றலும் விளங்கினார். அவர் ஒரு சிறந்த வீராங்கணையாக உருவாக்கப்பட்டார். சிவகங்கைச் சீமையின் இரண்டாவது மன்னர் முத்து வடுகநாதப் பெரிய உடையத் தேவருக்கு, வேலுநாச்சியார் திருமணம் செய்து வைக்கப்பட்டு அவரது பட்டத்து ராணியானார். முத்துவடுகநாதத் தேவர், சிவகங்கைச் சீமையை ஆட்சி செய்த போது, அவரது நிர்வாகத்திற்கு பிரதானி தாண்டவராய பிள்ளை, ராணி வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் பெரிதும் துணையாக இருந்தனர். இந்நிலையில் முத்து வடுகநாதத் தேவர், ஆற்காடு நவாபிற்கு கப்பம் கட்ட மறுத்ததால் கம்பெனிப் படையும், நவாபின் படையும் இணைந்து காளையார் கோயிலில் தங்கியிருந்த முத்து வடுகநாதத் தேவர் மேல் போர் தொடுத்தன. 25-6-1772ல் நடைபெற்ற காளையார் கோவில் போரில், கம்பெனிப் படையின் பீரங்கிக் குண்டுகளுக்குப் பலியாகி, மன்னரும் அவரது இளைய ராணி கௌரி நாச்சியாரும், அவரது படைவீரர்களும் வீர மரணமடைந்தனர். முத்து வடுகநாதர் இறந்தவுடன் வேலு நாச்சியார் உடன்கட்டையேறி, தனது உயிரைப் போக்கிக் கொள்ள விரும்பினார்.

Wednesday, 21 January 2015

நிகோலா டெஸ்லா

நிகோலா டெஸ்லா ஒரு கடுமையான மின்னல் புயல் போது ஜூலை 9, ஜூலை 10, 1856 இடையே நள்ளிரவில் பிறந்தார். குடும்ப புராணத்தின் படி, மிட்வே பிறப்பு மூலம், மருத்துவச்சி அவளைப் கைகளைப் பிசைந்து நின்றனர் மற்றும் மின்னல் ஒரு கெட்ட சகுனமாக பிரகடனம் செய்தனர். அவர் தாயார் இவன் வெளிச்சத்தின் குழ்ந்தை என்று கூறினார்.பெரும்பாலான மக்கள் டெஸ்லா  ஒரு பயங்கர நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்று கூறுவர். டெஸ்லா மற்றும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் இருவரும் எதிரிகள் என்று சொல்லப்பட்டது.ஆனால் கார்ல்சன் இந்த உறவு தவறு என்று கூறுகிறார்.அவர் ஒரு புகைப்பட நினைவகர் மற்றும் கிருமிகள்மீது பயம்
கொண்டவர்.


Monday, 19 January 2015

வில்லியம் ஷேக்ஸ்பியர்

வில்லியம் ஷேக்ஸ்பியர்,ஆங்கிலத்தில் தலைசிறந்த  கவிஞர்.இவர் 23 ஏப்ரல் 1564 ஸ்ட்ராட்போர்டு என்னும் ஊரில் பிறந்தார்.அவருடைய பெற்றோர்கள் ஜான் மேரி  ஷேக்ஸ்பியர் ஆவர்.இவருக்கு 8 சகோதர சகோதரிகள் உள்ளனர்.இவருடைய 18ஆவது அகவையில் அன்னே ஹாத்வே என்னும் 26 வயது பெண்ணை மணந்தார்.இவருக்கு 3 குழந்தைகள் உள்ளன.இவர் என்னற்ற கதைகள் மற்றும் கவிதைகள் எழுதியுள்ளார்.இவர் 37 நாடகங்கள் இயற்றியுள்ளார்.இவருடைய கதைகள் மிகவும் புகழ்பெற்றது.இவர் 23 ஏப்ரல் 1616ல் இயற்கை எய்தினார்.



Thursday, 15 January 2015

புளோரன்ஸ் நைட்டிங்கேல்






புளோரன்ஸ் நைட்டிங்கேல் ( மே 12, 1820 – ஆகஸ்ட் 13, 1910) நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதி. போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டவர். தாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் துவங்கினார். விளக்கேந்திய சீமாட்டி, கைவிளக்கேந்திய காரிகை (The Lady with the Lamp) என்று அழைக்கப்பட்டார். இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளியியலாளாரும் ஆவார். பராமரிப்பு, செயலில் கவனம் மற்றும் மருத்துவமனை மேலாண்மை என்பவற்றைக் கடைப்பிடித்ததன் மூலம் அனைத்துத் தாதியர்க்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

தரவியல் பயன்பாட்டில் இவர் தனது காலத்தினை விட முற்போக்கான சிந்தனை மற்றும் செயற்பாடுகள் உடையவராயிருந்தார்.

நைட்டிங்கேல் தாதியர் பயிற்சிக்கூடத்தின் சேவை இன்றும் தொடர்கிறது. புளோரன்ஸ் நைட்டிங்கேல் அருங்காட்சியகம் ஒன்று லண்டனிலும் இன்னுமொன்று இவரது வீடான கிளெய்டன் ஹவுசிலும் உள்ளன.

உலகத் தாதியர் தினம் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளன்று கொண்டாடப்படுகிறது.

கே எல் ஏம் (KLM) விமான நிறுவனம் தங்கள் எம் டி விமானமொன்றிற்கு புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பெயரை இட்டிருக்கிறது.

Tuesday, 13 January 2015

சுவாமி விவேகானந்தர்

மேற்கு இந்தியாவில் இந்து மதத் திருமந்திர தத்துவத்தை அறிமுகம்  செய்த மனிதன் அவரது குரு ஸ்ரீ ராமகிருஷ்ணா கடந்து செல்லும் நேரத்தில் கிட்டத்தட்ட பரம ஏழையாக இருந்தார்.அவர் வேறு எவரும் இல்லை,விவேகானந்தரே ஆவார்.அவரின் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மற்றும் அவரது புத்திசாலித்தனமான சொல்வன்மைக்காக அறியப்பட்டார்.பல்கலைக்கழக நுழைவு அளவிலான தேர்வு 46%  மட்டுமே எடுத்தார்.பின்பு FA (பின்னர், இந்த பரீட்சை இடைநிலை கலை அல்லது IA ஆனது) ஒரு 47% தேர்ச்சி பெற்றார், மற்றும் தனது பி.ஏ. பரீட்சையில்  56% பெற்றார்.அவரது பேச்சுதிறனால் அனைத்து நாட்டினரையும் வெகுவாக கவர்ந்தார்.அவரது சிகாகோ சொற்பொழிவை எவராலும் மற்க்க முடியாது.அவரது பிறந்ததினமான ஜனவரி 12 உலகளவில் இளைஞர்கள் தினமாக கொண்டாடபடுகிறது.

Sunday, 11 January 2015

புலிகள்

புலி felid (பூனை) குடும்பத்தைச் சேர்ந்த பெரிய உறுப்பினராக உள்ளது.அவைகள் வெள்ளை வயிறுகளில் வெள்ளை மற்றும் கருப்பு வால்கள் நீண்ட, தடித்த சிவப்பு தோள்கள் உடையவை.அவற்றின் தலை, உடல்கள் மற்றும் மூட்டுகளில் குறுகிய, கருப்பு பழுப்பு அல்லது சாம்பல் கோடுகள் உள்ளன. வங்காளம், சைபீரிய இந்தியசீனப், தென் சீன, சுமத்ரா, மலாயா, காஸ்பியன், ஜவான் மற்றும் பாலி: புலிகள் ஒன்பது உள்ளினங்களில் முறை இருந்தன. இவற்றில், கடந்த மூன்று இனம் அழிந்துவிட்டது, மற்றவை  அழிவின் விளின்பில் உள்ளன.புலிகள் முக்கியமாக அம்பர் மான், காட்டு பன்றிகள், நீர் எருமை மற்றும் மான்  ஆகியவற்றை வேட்டையாடி உண்ணும்.
1900 ஆண்டுகளின் முற்பகுதியில் தங்கள் எல்லை முழுவதும் சுமார் 100,000 புலிகள் இருந்தன. இன்று, 3,000-4,500 சுற்றி ஒரு கிட்டத்தட்ட மொத்த காடுகளில் இருக்கிறது. கீழே கிளையினங்கள் மூலம் புலி எண்கள் ஒரு முறிவு உள்ளது.
வங்கப்புலி: 2,000 க்கும் குறைவான
இந்தியசீனப் புலி: 750-1,300
சைபீரியன் புலியின்: 450
சுமத்திராப் புலி: 400-500
மலேயப் புலி: 600-800
தென் சீன புலியால் உயிரினம்
காஸ்பியன் புலியின்: அழிந்துவிட்டது
ஜாவாப் புலி: அழிந்துவிட்டது
பாலிப் புலி: அழிந்துவிட்டது



Thursday, 8 January 2015

ஸ்டீபன் வில்லியம் ஹாகிங்



ஸ்டீபன் ஹாகிங் எனும் நம்பிக்கை நாயகன் பிறந்த தினம் ஜனவரி எட்டு.பிரபஞ்சத்தில், பூமி தவிர, ஏனைய கோள்-களிலும் உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன எனக் கருத்துத் தெரிவிக்கிறார்.தமது 65 ஆம் பிறந்த நாளான 8.1.2007-ல்  ஈர்ப்புவிசையற்ற விண்பயணக்கலத்தில் (ZERO GRAVITY FLIGHT) பயணித்துப் பார்க்கும் விருப்பத்தினை வெளி-யிட்டார்.உலகையும் பிரபஞ்சத்தையும் படைப்பதற்குக் கடவுள் என்ற ஒன்று தேவையில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்தவர் ஹாகிங்.ஹாகிங்கைத் தாக்கிய நரம்புத்தசைச் செயலிழப்பு நோய் 1974 முதல் அவரைச் செயலிழந்தவராகவே ஆக்கிவிட்டது.இந்த நோய்தான் தாக்கியிருக்கிறது என்பது கண்டு-பிடிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்குமேல் யாரும் வாழ்ந்தது கிடையாது. அப்படி வாழ்பவர்கள் அரிது. இதுவரை உள்ள பதிவுகளின்படி ஒருவர் 32 ஆண்டுகள் நோயுடன் வாழ்ந்துள்ளார். ஆனால், ஹாகிங் 46 ஆண்டு-களுக்கு மேல் வாழ்ந்துவருகிறார். அப்படிப்பட்ட அரிதினும் அரிதான அறிவியல் அறிஞராகத் திகழும் ஹாகிங் ஒரு பகுத்தறிவாளர் என்பது கூடுதல் பெருமை.

Monday, 5 January 2015

பெனிட்டோ முசோலினி

பெனிட்டோ முசோலினி,இவரைப் பற்றித் தெரியாதவர்கள் இல்லை என்று தான் கூறவேண்டும்.இவர் இத்தாலியின் 40 வது பிரதமராக கிட்டத்தட்ட 20 ஆண்டு காலம் ஆட்சி புரிந்தார்.இவரை பெனிட்டோ அமில்கேர் ஆண்ட்ரியோ முசோலினி என்றும் அழைப்பர்.இவர் ஜூலை 29, 1883 அன்று வடக்கு மத்திய இத்தாலியில் பிறந்த போதிலும், தீவிர வறுமையின் காரணமாக, 1902 இல், சுவிச்சர்லாந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.அவருடைய குடும்பத்தில், அவரது தாயார், ரோசா மல்டோனி, ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியை,தந்தை ஒரு கொல்லனாகவும் இருந்தனர். அவருக்கு ஒரு சகோதரன் மற்றும் சகோதரி இருந்தனர்.பெனிட்டோ முசோலினி ஒரு எளிதான குழந்தை இல்லை.அவர் மிகவும் ஒரு குறுகிய நிதானத்தை கொண்டு ஒரு கீழ்ப்படியாத சிறுவனாக இருந்தார்.இதனாலேயெ அவர் பள்ளியில் இருந்து இரண்டு முறை வெளியேற்றபட்டார்.அவர் தன்னுடன் படித்த சக மாணவரை கத்திமுனையில் மிரட்டிவிட்டு தப்பித்து சென்றுவிட்டார்.பின்பு எப்படியோ பட்டயபடிப்பை வெற்றிகரமாக முடித்தார்.இவர் 1904சல்,இத்தாலிய இரானுவத்தில் சேர்ந்தார்.1922ஆம் ஆண்டு இத்தாலிய நாட்டின் பிரதமராக முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர்தான் இளவயதிலேயே பிரதமர் ஆனவர்.
 

Saturday, 3 January 2015

ஹெலன் கெல்லர்

ஹெலன் கெல்லர் (ஜூன் 27, 1880- ஜூன் 1, 1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர்அமெரிக்கப் பெண் ஆவார். அவர் பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாகக் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார். ஆஸ்திரிய தத்துவவியலாளரான வில்லம் ஜெருசலம் என்பவர் ஹெலன் கெல்லருடைய எழுத்தார்வத்தை வெளிக்கொணர உதவினார். 1999களில் கெல்லர் இருபதாம் நூற்றாண்டின் உலகின் மிகச் சிறப்புமிக்கப் பெண்மணியாக அறியப்பட்டார். 2003 இல் அலபாமா மாநிலம் அம்மாநிலத்தின் சிறப்புமிக்கக் குடிமகளாக அறிவித்தது. 2009, அக்டோபர் 7 இல் அலபாமா மாநிலத்தில் ஹெலன் கெல்லருடைய வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. முதன் முதலில் மாற்றுத் திறனாளிக்கு அதுவும் குழந்தைப் பருவத்தில் தலைநகரில் சிலை வைக்கப்பட்டது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.


Thursday, 1 January 2015

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஜனவரி 1 ஆம் தேதி புதிய ஆண்டு கொண்டாட்டம் ஒப்பீட்டளவில் ஒரு புதிய நிகழ்வு ஆகும். ஒரு புதிய ஆண்டு கொண்டாட்டம் முந்தைய பதிவு மெசபடோமியா, கேட்ச் இருந்ததாக நம்பப்படுகிறது. 2000 பி.சி மற்றும் மார்ச் மாதம் நடுப்பகுதியில், தட்சிணாயணம் நேரம் சுற்றி கொண்டாடப்பட்டது. பருவங்கள் கட்டி தேதிகளையும் ஒரு வகையான பல்வேறு பழங்கால கலாச்சாரங்கள் பயன்படுத்தப்படும். எகிப்தியர்கள் ஃபொனீஷியன்ஸ், மற்றும் பெர்சியர்கள் இலையுதிர்கால சம இரவு நாள் தங்கள் புதிய ஆண்டு தொடங்கியது, மற்றும் கிரேக்கர்கள் குளிர்கால சங்கிராந்தி இது கொண்டாடப்படுகிறது.ஆரம்ப ரோமன் நாட்காட்டி: புத்தாண்டு மார்ச் 1 முதல் ரிங்க்ஸ் புதிய ஆண்டு மார்ச் 1 நியமிக்கப்பட்டது.ஆரம்ப ரோமன் காலண்டரில். காலண்டர் மார்ச் தொடங்கி, வெறும் பத்து மாதங்களுக்கு இருந்தது.