Sunday, 31 August 2014

பெய்லி பிரிட்ஜ்

பாலம் என்றால் ஒரு ஆற்றின் குறுக்கே கட்டபடுவது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று .அதை கட்டுவது என்பது சுலபமான காரியம் இல்லை .ஆனால்   "பெய்லி பிரிட்ஜ் " கட்டுவது என்பது சுலபமான காரியம். அவை வேறு இடத்தில் கட்டப்பட்டு பின் குறிபிட்ட இடத்தில் பொருத்தப்படுகின்றன .இவைகள் பெரிய பெரிய இயந்திரங்களின் உதவியை நாடுவது இல்லை .உலகின் உயரமான பெய்லி லடாக்கில் 1982 ஆம் ஆண்டு கட்டப்பட்டது .
இந்த பிரிட்ஜ்  இந்திய இராணுவத்தினரால் கட்டப்பட்டது 

Saturday, 30 August 2014

செஞ்சிக் கோட்டை

சத்ரபதி சிவாஜி அவர்களால்  "இந்தியாவின் மிக வலுவான கோட்டை" என்றும் பிரிட்டிஷ் அரசால் "கிழக்கு டிராய்" என்றும்  பெயரிடப்பட்ட  கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செஞ்சி  கோட்டை ஆகும்.இக்கோட்டை ஆனது முதன்முதலில் 9ஆம் நூற்றாண்டில் ஆனந்த கோனர் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.பின்பு 12ஆம் நூற்றாண்டில் சோழ மன்ன்ர்களால் கட்டிமுடிக்கபட்டது.இது மூன்று மலைகளில்மீது அமைந்துள்ளது.இது 800 அடி உயரத்தில் கட்டப்பட்டது.இக்கோட்டையை பாதுகாக்க கோட்டையைச் சுற்றி 80 அடி அகல அகழி உள்ளது.
இதில் ஏழு அடுக்கு கல்யாண மண்டபமும்,களஞ்சியமும்,சிறைச் செல்களும் அமைந்துள்ளது.அதுமட்டுமின்றி  செஞ்சி அம்மனுக்கு ஒரு கோவிலும் உள்ளது.
1660-1677 ஆகிய காலகட்டத்தில் இக்கோட்டையை பிஜாபூர் நவாப் ஆண்டுவந்தனர்.அப்போழுது இதற்கு பட்ஸாபாத் என்று பெயர்.அதன்பின் மராத்தாஸ் சண்ட்ரி(chandry) அல்லது சிண்டி(chindy) என்று அழைத்தனர்.1968ல் முகலாயர்கள் இதனை நுஸ்ரத்காத் என்று அழைத்தனர்.கடைசியாக ஆங்கிலேயர்கள் மற்றும் பிரஞ்சுகாரர்கள் இதனை செஞ்சி அல்லது  ஜிஞ்சி என்றனர்.



குதுப் மினார்

குதுப் மினார், தில்லியில் 72.5 மீட்டர்கள் (237.8 அடி) உயரம் கொண்ட கோபுரமாகும். மேலும் செங்கல்லால் செய்த உலகிலேயே உயர்ந்த பள்ளி வாயில் தூபி இதுவே ஆகும். இந்தியாவின் முதல் முஸ்லீம் அரசரான குத்துப்புத்தின் ஐபக் ஆணையிட்ட படி, இந்த தூபியின் கட்டிடப்பணி 1193 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது, இந்த தூபியின் மிகவும் உயரத்திலான தளம் 1386 ஆம் ஆண்டில் பிரோஸ் ஷா துக்ளக் மேற்பார்வையில் கட்டிமுடிக்கப்பெற்றது. குதுப் மினார் என்பது இந்திய-இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு மிகவும் புராதனமான எடுத்துக்காட்டாக பெயர் பெற்றதாகும். இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு அதன் தொடக்க மற்றும் மிகப் பிரசித்தி பெற்ற எடுத்துக்காட்டுகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக குதுப் மினார் திகழ்கின்றது.


Thursday, 28 August 2014

திமிங்கிலம் (Whale)

திமிங்கிலம் நீரில் வாழும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இதன் ஒரு வகையான நீலத் திமிங்கிலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது. திமிங்கிலங்கள் வெப்ப இரத்தப் பிராணிகளாகும். இவை நுரையீரல் மூலமே மூச்சுவிடுகின்றன.இவை வெப்ப இரத்த விலங்குகள். திமிங்கிலங்களில் 75 வகைகள் உள்ளன. உலகிலுள்ள உயிரினங்களுள் மிகப்பெரியதாக வளரக்கூடிய இனம் நீலத் திமிங்கிலம் ஆகும். இது சற்றேறக்குறைய 100 அடி நீளமும் 150 டன் எடையுள்ளதாகவும் வளரக்கூடியது. நீலத் திமிங்கிலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்கும். இத்தகைய திமிங்கிலத்திடம் மூர்க்கமான குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை ஆகும்.

திருப்பதி

இந்தியாவிலேயே  மிகபெரிய  வழிபாட்டுதலம்  ஆந்திராவில் உள்ள திருப்பதி ஆகும்.இதுவே உலகில் உள்ள மிகபெரிய  விஸ்ணு  ஆலயம்  ஆகும்.இங்கு தினமும் 30000க்கு மேற்ப்பட்ட மக்கள்  சுவாமி தரிசனம்  செய்கின்றன்ர்.கிட்டதட்ட நாள்  ஒன்றிர்க்கு  6 அமேரிக்க டாலர்கள்  நங்கொடையாக வருகின்றது.

Tuesday, 26 August 2014

தேசிய கொடி

நமது தேசிய கொடியை 1947ல் உருவாக்கபட்டது அல்ல.நமது தேசிய கொடி உருவான வரலாற்றை பற்றி காண்போம்:
இந்தியாவின் முதல் தேசிய கொடி கொல்கத்தா இப்போது கல்கத்தாவில் பார்சி பாகன் சதுக்கத்தில் (கிரீன் பார்க்), ஆகஸ்ட் 7, 1906 பறக்கவிடப்பட்டது என்று கூறப்படுகிறது.
இரண்டாவது கொடி 1907 ஆம்  ஆண்டு மேடம் காமாவ மற்றும் அவரது நாடுகடத்தப்பட்ட புரட்சியாளர்கள் படையினால் பாரிசஸில் பறக்கவிடப்பட்டது.
மூன்றாவது கொடி 1917ல் நமது அரசியல் போராட்டத்தின்  போது  டாக்டர் அன்னி பெசன்ட் மற்றும் லோகமான்ய திலகர் ஹோம் ரூல் இயக்கத்தை தோற்றுவித்தபோது  பறந்தது.
1921 இல் பெஸ்வாடாவில்  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றபோது (இப்போது விஜயவாடா) பிங்காலி வெங்கையா ஒரு கொடி தயாரித்து  காந்திஜியிடம் கொண்டுசென்றார். அது இரண்டு நிறங்கள் சிவப்பு மற்றும் பச்சை பிரதிநிதித்துவப்படுத்தும்  விதமாக செய்யப்பட்டது,அதாவது இரு பிரதான சமூகங்கள் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் . காந்திஜி தேசத்தின் முன்னேற்றதின் சின்னமாக  சுழலும் சக்கரம் மீதமுள்ள பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வெள்ளை துண்டு கூடுதலாக பரிந்துரைத்தார்.
1931ஆண்டு நமது கொடியின் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். ஒரு தீர்மானம்  இதுதான் எங்கள் தேசிய கொடி என்று ஒரு வர்ணம் கொடி ஏற்றுக்கொண்ட நிறைவேற்றப்பட்டது. இந்த கொடி, தற்போதுள்ள ஸாஃப்ரான், வெள்ளை,பச்சை மற்றும் மையத்தில் மகாத்மா காந்தியின் சுழலும் சக்கரம்  இருந்தது. இது, எனினும், தெளிவாக இல்லை இனவாத முக்கியத்துவத்தை பெற்றதால் விளக்கம் வேண்டும் என்று கூறினார்.
ஜூலை 22, 1947 அன்று, அரசியல் நிர்ணய சபை சுதந்திர இந்திய தேசிய கொடி ஏற்கப்பட்டது. சுதந்திர வருகைக்கு பின், வண்ணங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை அதே இருந்தது. மட்டும் அசோக சக்கரவர்த்தியின் தர்ம ராட்டினம் கொடி சின்னமாக சுழலும் சக்கரம் இடத்தில் ஏற்கப்பட்டது. இதனால், காங்கிரஸ் கட்சி மூவர்ணக் கொடியை இறுதியில் சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியை மாறியது.



Monday, 25 August 2014

சாய்ந்த கோபுரம்

பைசா நகரின் சாய்ந்த கோபுடரத்தின் எடை 14500 டன் ஆகும்.இதை  கட்டி முடிக்க கிட்டதட்ட 800 ஆண்டுகள் ஆனது.இது வெரும் 55.86 மீ மட்டுமே உயரம் கொண்டது.800 ஆண்டுகள் ஆனதர்க்கு காரண்ம் இடையில் 100 ஆண்டுகள் கட்டாமல் கிடப்பில் போடபட்டது.இந்த கோபுரத்தில் மொத்தம் 286 படிகட்டுகள் உள்ளது.

Saturday, 23 August 2014

பவளப் பாறைகள் (Coral Reefs)



பவளப் பாறைகள் (Coral Reefs)
என்பவை கடலினுள் பவளம் எனப்படும் ஒரு உயிரினத்தால் சுரக்கப்படும் கல்சியம் கார்பனேட்டினால் உருவாகின்றன. பெரும்பாலும் இவை காணப்படும் பகுதி பூமத்தியரேகைக்கு கீழே உள்ள வெப்ப நாட்டு கடல் பகுதிகளும், பசிபிக் பெருங்கடலும் ஆகும். இந்தியாவில், அந்தமான் தீவுகளிலும், லட்சத் தீவுகளைஓட்டிய கடல் பகுதிகளிலும் இவை காணக்கிடைக்கின்றன.
பவளப்பாறைகளில் கண்டத்திட்டுப் பவளப்பாறைகள், தடுப்புப் பவளப்பாறைகள், வட்டப் பவளத்திட்டுகள் என மூன்று வகைகள் உள்ளன.

பசிபிக் பெருங்கடலில் பல அழகான வண்ணங்களில் பவளப்பாறைகள் அமைந்துள்ளன. இவை பச்சை, கருஞ்சிவப்பு, பழுப்பு, மஞ்சள் முதலான நிறங்களில் காணப்படுகின்றன. மேலும் இவை பல்வேறு கடல் உயிரினங்கள் வாழ்வதற்கான இடமாகவும் இருக்கின்றன.

ஜெல்லி மீன்

உலகிலையே அதிகம் விஷத்தன்மை உடையது மீன் வகையை சார்ந்த "ஜெல்லி மீன் " ஆகும் ... இவை பார்பதற்கு அழகாக இருக்கும் ஆனால் இதனுடைய விஷம் ஆனது மனிதனை மூன்று நிமிடங்களில் கொள்ளக் கூடியது...இவை இரையை பிடிக்க  டெண்டக்கல்ஸ்("TENTACLES") ஐ பயன்படுத்துகின்றன.....யாவை ஆஸ்திரேலியா கடல் பகுதியில் தான் அதிகம் காணப்படுகின்றன ....

Friday, 22 August 2014

கனவுகள்

மனித மூளை பல சிக்கலான படைப்புகளைப் பெற்று இருக்கிறது. ஆனால் அது மக்கள் படத்தை கண்டுபிடிக்க முடியாது.எனவே நீங்கள் உங்கள் கனவுகளில் சந்திக்கின்ற"அந்நியர்களுக்கு" உண்மையில் நீங்கள்  உங்கள் வாழ்வில் ஒருமுறையாவது பார்த்திருக்க கூடும்.ஆனால் அவர்களின் முகம் உங்களுக்கு மறந்திருக்ககூடும்.
உண்மையில், ஒரு சமீபத்திய ஆய்வில், இன்னும் ஒவ்வொரு கனவு ஆரம்பத்தில் விழித்துக்கொண்ட மாணவர்கள், அனைத்து அனுபவம் சிரமம் மூன்று நாட்கள் இடைவெளியில், எரிச்சல், பிரமைகள், மற்றும் உளப்பிணி அறிகுறிகள் கவனமின்மை, தூக்கம் ஆகியவற்றால் பாதிக்கபட்டனர்.
அவர்கள் REM தூக்கம் அனுமதிக்கப்பட்டபோது, அவர்களின் மூளை REM நிலையில் கழித்த தூக்கம் சதவீதம் அதிகரித்தது.பல மக்கள் தங்கள் கனவுகளில் இருந்து உத்வேகம் ஈர்த்துள்ளன.


Thursday, 21 August 2014

மின்காந்த நிழற்பட்டை (Electromagnetic spectrum)



இருக்ககூடிய அனைத்து மின்காந்த கதிர்வீச்சின் விபரிப்பே மின்காந்த நிழற்பட்டை (Electromagnetic spectrum) ஆகும். மின்காந்த கதிர்வீச்சுக்களை அதன் அலைநீளம் அல்லது அலையெண் கொண்டு விபரிக்கலாம். மின்காந்த நிழற்பட்டை நுண்ணிய அலைநீளத்தில் இருந்து மிக நீண்ட அலைநீள மின்காந்த கதிர்வீச்சுக்களை உள்ளடக்கும்.

· காம்மா அலைகள் (1010 - 1013 GHz)
· ஊடு கதிர் அலைகள் (108 - 109 GHz)
· புற ஊதா கதிர்கள் (106 - 108 GHz)
· ஒளி அலைகள் (105 - 106 GHz)
· அகச்சிவப்புக் கதிர்கள் (103 - 104 GHz)
· நுண்ணலைகள் (3 – 300 GHz)
· வானொலி அலைகள் (535 kHZ - 806 MHz)


Wednesday, 20 August 2014

இந்திய ராணுவத்தின் தந்தை

இந்தியாவின்  முதல் ஜனாதிபதி யார் என்றெலாம் தெரிந்து வைத்து இருக்கிறோம் . ஆனால் நம்மை இரவும் பகலுமாக அயராது பாடுபட்டு காத்துகொண்டு இருக்கும்  இந்திய ராணுவத்தின் முதல் ராணுவ தளபதி யார் என்று தெரியுமா ??...ஜெனரல் கே. எம் .கரியப்பா ...அவர் பிறந்த ஊர் மைசூர்....வெளிநாட்டு பிரஜைகளும் வணங்கும் நபராக திகழ்ந்த அவர் மீளும் திறனும் நித்திய தேச பற்றும் கொண்ட நபர் .. இதனாலயே மக்கள் இவரை "கிப்பர் " என்று அன்போடு அழைத்தனர் ... பல வகையில் அவர்  கௌவரிவிக்க பட்டாலும் கடைசி வரை எளிமையாகவே வாழ்ந்தார்..சுதந்திரத்துக்கு பிறகு ராணுவத்துக்கு அவரது பங்களிப்பு முக்கியமாக கருதபட்டது ....அவரே "இந்திய ராணுவத்தின் தந்தை" என்று அழைக்க படுகிறார் ....



Tuesday, 19 August 2014

தாமரைக் கோயில்

தாமரைக் கோயில் (Lotus temple) என்பது இந்தியாவில் தில்லியில் உள்ள பஹாய் வழிபாட்டுத்தலம் ஆகும். அதன் தாமரை மலர் போன்ற வடிவத்தின் காரணமாக தாமரைக் கோயில் என அறியப்படுகிறது. பஹாய் வழிபாட்டுத்தலம் டெல்லியின் வசீகரமான இடமாக உள்ளது. 1986 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இது இந்தியத் துணைக்கண்டத்தின் தாய்க் கோயிலாகக் கருதப்படுகிறது. இது எண்ணற்ற கட்டடக்கலை விருதுகளை வென்றுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான செய்தித்தாள் மற்றும் நாளிதழ் கட்டுரைகளில் தனித்தன்மையுடன் வெளிவந்துள்ளது. அதன் புறப்பரப்பு வெள்ளைப் பளிங்கினால் உருவாக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத்தளமும் அதனைச் சூழ்ந்துள்ள ஒன்பது தூண்களும், தோட்டங்களும் 26 ஏக்கர் (105,000 m²; 10.5 ha) நிலப்பரப்பில் அமைந்துள்ளன. நாட்டின் தலைநகரமான டெல்லியில் உள்ள பாஹாபூர் என்ற கிராமத்தில் இந்த இடம் உள்ளது. இதனைக் கட்டிய கட்டடக்கலை நிபுணர் ஃபாரிபோர்ஸ் சாபா ஒரு ஈரானியர் ஆவார்.


அலெக்சாண்டர் அறியவியல் சிந்தனை

அலெக்ஸாண்டர் சிறுவயதாக இருந்தபோது நடந்த சம்பவம் இது. தன் தந்தை பிலிப்ஸ் சிலிரியா நாட்டில் படையெடுப்பு நடத்திக்கொண்டிருந்தபோது மாசிடோனியாவில் படைவீரர்கள் சில கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்வதை பார்த்த அலெக்ஸாண்டர் நீதிமன்றத்திற்குள் நுழைந்தார். அங்கே அந்த கைதிகள் புரட்சியில் ஈடுபட்டதாக கூறி அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இளவரசன் அலெக்ஸாண்டர் நீதிபதியைப் பார்த்து நான் ஏதாவது சொல்லலாமா என்று கேட்டார் இளவரசன் என்பதால் நீதிபதியும் இணங்கினார்.
அலெக்ஸாண்டர் கைதிகளுக்கு ஆளுக்கொரு கத்தியைக் கொடுத்து சிலிரியாவில் அரசர் பிலிப்ஸ் யுத்தத்தில் இருக்கிறார் அந்த யுத்தத்தில் பங்கெடுத்து நீங்கள் போரிட்டால் உங்களுக்கு விடுதலை. மரணவாயிலிருந்து தப்பிய கைதிகள் அலெக்ஸாண்டர் சொன்னபடியே போரில் கலந்துகொள்ளச் சென்றனர். உயிர் விலை மதிப்பற்றது அதனை இழப்பதென்றால் அது தேசத்திற்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று தனது தீர்ப்புக்கான காரணத்தை விளக்கினார் அலெக்ஸாண்டர் நீதிபதிகளுக்கே இந்த நீதியைச் சொன்னபோது அலெக்ஸாண்டருக்கு வயது என்ன தெரியுமா? வெறும் ஏழுதான்.

அலெக்ஸாண்டரின் புத்திக்கூர்மையை பறைசாற்ற இன்னொரு சம்பவம் வரலாற்றிலேயே மிக புகழ்பெற்ற குதிரையின் பெயர் ஃபுசிபேலஸ் எல்லா வித்தைகளையும் அறிந்த அந்த குதிரை பிலிப்ஸ் மன்னனிடம் விற்கப்பட்டது. அந்த குதிரை யாருக்குமே அடங்காமல் திடலில் குதித்துக் கொண்டிருந்தது. உன்னால் முடியாது வேண்டாம் என்று மன்னர் பிலிப்ஸ் எவ்வளவோ தடுத்தும் அதனை தாம் அடக்குவதாக கூறி களம் இறங்கினார் அலெக்ஸாண்டர். குதிரை தன் நிழலையே பார்த்து மிரல்கிறது என்று சில நொடிகளில் புரிந்துகொண்ட அலெக்ஸாண்டர் சூரியனை நோக்கி குதிரையை திருப்பினார். குதிரையை மிரட்சியை மறந்து அமைதியானது கூடியிருந்தவர் அலெக்ஸாண்டரின் புத்திக்கூர்மையை கண்டு வியந்தனர்.
மிகவும் பிடித்துப்போனதால் அந்தக் குதிரையையே தனது சொந்தக் குதிரையாக்கிக்கொண்டார் அலெக்ஸாண்டர். அவரது இறுதிகாலம் வரை கூடவே இணைந்திருந்தது ஃபுசிபேலஸ் அதனால்தான் வரலாற்றிலேயே ஆக புகழ்பெற்ற குதிரை என்ற பெயர் அதற்கு கிடைத்தது.

ஹில்லியர் ஏரி

ஹில்லியர் ஏரி மேற்கு ஆஸ்திரேலியாவில்  அமைந்துள்ளது.இந்த ஏரியின் சிறப்பு  என்னவென்றால்  இதில் உள்ள தண்ணீர் பிங்க் நிறத்தில் உள்ளது.இந்த இடத்திற்கு அருகில்தான்  தெற்கு  பெருங்கடல்  அமைந்துள்ளது.இந்த ஏரி  இந்த நிறத்தில் இருக்க காரணம் இங்கு மண்ணில்  வாழும்  சில வகை பாசி(ஆல்கே )யினால் ஏற்பட்டது ஆகும்.இந்த  காரணத்தினால்  இந்த இடம் சுற்றுலா தளமாக  மாறிவிட்டது.


Monday, 18 August 2014

பராக்கா அணை

பராக்கா அணை (Farakka Barrage) கங்கை நதியின் குறுக்கே கட்டபட்டுள்ள அணைக்கட்டு ஆகும். இதுஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது வங்காள தேசம் நாட்டின் எல்லையிலிருந்து 16.5 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இவ்வணைக்கட்டானது 1961 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 1975 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணையானது 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தியதி செயல்படத் தொடங்கியது. இதன் நீளம் 2,240 மீட்டர்கள் ஆகும். வங்காளதேசம் மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையே நடைபெற்ற பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இந்த அணை கட்டப்பட்டது. அதன் பின்னர் வங்காள தேசம் பஞ்ச காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

Sunday, 17 August 2014

இந்தியன் இரயில்வேஸ்

இந்திய ரயில்வே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ,  20 லட்சம் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்.. இது இதுவரை உலகின் எந்த அமைப்பிலும் பெரியது ஆகிறது.
16000 க்கும் மேற்பட்ட ரயில்கள் தினமும்  20 லட்சம் பயணிகளுடன் 10,000 நிலையங்களுக்கு அருகில் கடக்கின்றன. ஆனால் இன்னும் ஆச்சரியமான விஷயம், நீங்கள் இரண்டு முறை சந்திரனில் இருந்து திரும்ப முடியும் இந்த ரயில்கள் தினமும் கடக்கும் தூரத்தில் (ஒரு நாளைக்கு லட்சம் 13 க்கும் மேற்பட்ட கி.மீ.)


Friday, 15 August 2014

இந்திய சுதந்திர தினம்



இந்திய சுதந்திர தினம் அல்லது இந்திய விடுதலை நாள் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 ம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15 ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி சுதந்திர நாடானதைகுறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.

இந்த நாளில் இந்தியப் பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி எற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.

ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.


Wednesday, 13 August 2014

நானோ தொழில்நுட்பம்



நானோ தொழில்நுட்பம் எனப்படுவது 100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுகளால் அமைந்த உருவ அமைப்புகளைக் கொண்டு, அச்சிறு அளவாக அமையும்பொழுது சிறப்பாக வெளிப்படும் பண்புகளைக் கொண்டு ஆக்கபடும் கருவிகளும், அப்பொருட்பண்புகளைப் பயன்படுத்தும் நுட்பியலும் நானோ தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுகின்றது.

ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரின் 1,000,000,000ல் (ஒரு பில்லியனில், 10−9) ஒரு பங்கு. ஒரு நானோ மீட்டர் நீளத்தில் 8-10 வரையான அணுக்களே அமர முடியும். பொதுவாக ஒரு மனிதர்களின் தலைமுடியானது 70,000 முதல் 80,000 நானோ மீட்டர் தடிப்புடையது. புகையிலைப் புகையின் மிகச்சிறிய துணுக்கு 10 நானோமீட்டர்

நானோ தொழில் நுட்பம் என்பது உண்மையிலேயே பல துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, ஏற்படுத்திவரும் ஒரு நுட்பம் ஆகையால் நானோ தொழல்நுட்பங்கள் (நானோ நுட்பியல்கள்) என்று பன்மையில் அழைக்கப்பட வேண்டிய ஒன்று. காரணம் நானோ தொழில் நுட்பம் ஒரு தனிப்பட்ட துறையில் மட்டும் செல்வாக்கு செலுத்த தொடங்கவில்லை மாறாக உயிரியல், வேதியியல், இயற்பியல், மின்னியல், மருத்துவம், பொறியியல் என்று பல்துறைகளில் தாக்கம் செய்து வருகின்றது. அமெரிக்காவின் நேசனல் நானோ டெக்னாலச்சி இனிசியேட்டிவ் (National Nanotechnology Initiative) (நாட்டின் நானோ தொழில்நுட்ப முன்னூட்டு) என்பது நானோ தொழிநுட்பத்தைக் கீழ்க்காணுமாறு வரையறை செய்கின்றது. "Nanotechnology is the understanding and control of matter at dimensions of roughly 1 to 100 nanometers, where unique phenomena enable novel applications." நானோ தொழில்நுட்பம் என்பது 1-100 நானோ மீட்டர் அளவிலான பொருளின் இயல்புகளை அறிந்து கட்டுப்படுத்தி, அதன் தனிச்சிறப்பால் நிகழும் புது விளைவுகளின் அடிப்படையில் புது பயன்பாடுகளுக்கு வழி வகுப்பதாகும்.

Tuesday, 12 August 2014

புனித கங்கை

இந்துக்கள் எப்போதும் கங்கா ஜலம், தூய்மை,பக்தி மற்றும் குடிக்கக்கூடிய நீர் என நம்பப்படுகிறது. மிகவும் மரியாதையுடன் (பிறப்பு முதல் இறப்பு வரை) இந்து மதம் சடங்குகள் போது கங்கை நீர் வழங்கப்படுகிறது. ஆனால் அதை நிரூபிக்க எந்த அறிவியல் நம்பகத்தன்மை உண்மையில் இருக்கிறது?
1896 ல், கங்கை நீரை சோதனை செய்த பிறகு ஏர்னஸ்ட் ஹான்பரி ஹான்கின்(பிரித்தானிய நுண்ணுயிரியவாதி) கங்கையின் நீரினை வைத்து சோதனை செய்தபோது கொடிய காலராவை ஏற்படுத்துகிற  பாக்டீரியம் விப்ரியோ மூன்று மணி நேரத்திற்குள் இறந்துவிட்டது என்பதைபற்றி விவரிக்கும் பிரஞ்சு இதழில் ஒரு கட்டுரை எழுதினார். அதே பாக்டீரியா கூட 48 மணி நேரம் கழித்து காய்ச்சி வடிகட்டிய நீரில் தொடர்ந்து செழித்தோங்கியது. அவர் இந்த நதி மற்றும் அதன் கிளை யமுனா நீரில் அந்த நாட்களில் கொடிய காலரா பரவுவதற்கான காரணம் என்று கூறினார். இதேபோல், 1927 ல், ஃபெலிக்ஸ் டி ஹெரலே (ஒரு பிரஞ்சு-கனடிய நுண்ணுயிரியவாதி) காலரா மற்றும் வயிற்றுக்கடுப்பினால் இறந்த மக்களின் மிதக்கும் உடல்கள்  சற்று கீழே உள்ள நீரில் எந்த கிருமிகளும் இல்லை என கண்டுபிடிக்கபட்டது வியப்பாக உள்ளது.கங்கை நீரில் உள்ள பாக்டீரியோபேஜஸ் (பாக்டீரியாவை கொல்லும் வைரஸ்கள்) தான் இந்த தரம் மற்றும் அதன் தூய்மைக்கு காரணம் என்று கருதப்படுகிறது.


Saturday, 9 August 2014

ரக்ஷா பந்தன்





ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளிற் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். அடிப்படையில் இந்துக்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகையை மதப் பணடிகை என்பதை விட சமுதாயப் பண்டிகை என்று கூறுவது பொருந்தும்.




வட இந்தியாவில் பிரபலமாக உள்ள இந்த நிகழ்ச்சி தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. வண்ணமயமான ராக்கிகள், தென்னிந்தியாவில் சின்னச் சின்ன கடைகளில் கூட தொங்குவதைக் காணலாம்.

புற ஊதாக் கதிர்



புற ஊதாக் கதிர் (Ultraviolet rays) என்பது கண்களால் பார்த்து பெரும்பாலும் உணரமுடியாத மின்காந்த ஒளிஅலைகள் ஆகும். சூரிய ஒளியின் நிறமாலையில் (Spectrum) கண்ணுக்குப் புலப்படுகின்ற சிவப்பு முதல் ஊதா வரையான கதிர்களின் ஒழுங்கில், ஊதாக்கதிர்களுக்கு அப்பால் இருப்பதால் இது புற ஊதாக் கதிர் எனப்படுகின்றது.புற ஊதா ஒளி ஊதா ஒளியை விட குறைந்த அலைநீளம் கொண்டது. அதனால் நிறமாலையில் ஊதாவிற்கு அப்பால் என்று பொருள்பட புற ஊதா என்று அழைக்கப்படுகிறது.



இரசாயன எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதாலும் பொருட்களில் ஒளிர்வை தூண்டுவதாலும் புற ஊதா ஒளி, நவீன சமூகத்தில் பல பயனுள்ள பயன்பாடுகளை கொண்டுள்ளது

Friday, 8 August 2014

இரட்டையர்கள் நகரம்!!

கொடின்ஹி(KODINHI) கேரளாவில் உள்ள ஒரு விசித்திர நகரம்.இது கோலிகோட்டிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது.இங்கு 2000 குடும்பத்திற்கு நிகராக வாழ்கின்றனர்.இங்கு முஸ்லீம் மக்கள்தான் பெரும்பாலும் இருக்கின்றனர்.விசித்திரம் என்னவென்றால் இங்கு இரட்டையர்களின் பிறப்பு சதவீதம் அதிகமாக உள்ளது.2009ஆம் ஆண்டின் நிலவரப்படி 220 இரட்டையர்கள் மற்றும் 2 ஜோடி டிரிபிளட்(3 குழந்தைகள்)பிறந்துள்ளனர்.இன்னொரு ஆச்சரியமான செய்தி என்னவென்றால் இங்கு பிறந்த பெண்கள் வெளிநாட்டிற்கு திருமனம் செய்து சென்றாலும் அவர்களுக்கும் இரட்டை குழந்தைகளே பிறந்துள்ளனர்.


Thursday, 7 August 2014

குருதி

குருதி நீர்மம் என்பது மஞ்சள் நிற (வைக்கோல் நிறம்) நீர்மம். இதுவே குருதியின் கன அளவில் 55% முதல் 65% ஆகும். குருதிநீர்மம் பெரும்பாலும் நீரால் ஆனது. இந்த மஞ்சள் நிற குருதிநீர்மத்தில் சிவப்பணுக்களும் வெள்ளை அணுக்களும், குருதிச் சிறுதட்டுக்களும் கூழ்மங்களாக (புதைமிதவிகளாக (colloids)) இருக்கின்றன. குருதிநீர்மம் பெரும்பாலும் நீரால் ஆனதெனினும், நூற்றுக்கணக்கான வேறு பொருட்களும் உள்ளன. அவற்றுள் பல்வேறு புரதப்பொருள்கள் (proteins), உடல் செரித்த உணவுப்பொருட்கள், கழிவுப் பொருட்கள், உப்புபோன்ற தாதுப்பொருட்கள் சிலவாகும்.

குருதிநீர்மத்தில் உள்ள புரதப்பொருட்களில் ஆல்புமின் (albumin), நாரீனி (புரதம்) (fibrinogen), குளோபுலின் (globulin), என்பவை சில. ஆல்புமின் என்பது குருதியை குருதிக் குழாய்களுக்குள் (நாளங்களுக்குள்) இருக்க துணை புரிகின்றன. இதன் முக்கிய தொழில் குருதியில் சவ்வூடு பரவல் அழுத்தத்தைச்சீராக வைத்திருத்தல் ஆகும். இந்த வெண்ணி என்னும் ஆல்புமின் குறைந்தால், குருதி குழாய்களில் இருந்து குருதி கசிந்து வெளியேறி அருகிலுள்ளஇழையங்களினுள் சென்றுவிடும். இதனால் எடிமா (edema) என்னும் வீக்கம் ஏற்படும். நாரீனி என்னும் புரதம் இருப்பதால், அடிபட்டால் குருதி இறுகிகுருதி உறைந்து, மேலதிக குருதிப்பெருக்கு ஏற்படுவது தடுக்கப்படும். இந்த நாரீனி இல்லையெனில் குருதி உறையாமை ஏற்படும். நுண்குளியம் என்னும் மிகச்சிறு உருண்டை வடிவில் உள்ள புரதப்பொருள் பல உள்ளன, அதில், காமா (gamma) நுண்குளியம் என்பது பிறபொருளெதிரியாகும். இது நோந் எதிர்ப்பாற்றல் முறைமையின் பகுதியாக இருந்து, நோய்த்தொற்றுக்களுக்க எதிராகத் தொழிற்படும்.

Wednesday, 6 August 2014

செங்கோட்டை

செங்கோட்டை,முகாலாய பேரரசர் ஷாஜகான் அவர்களால் கட்டப்பட்டது.அப்பொழுது தான் ஆக்ராவிலிருந்து தில்லி தலைநகராக மாற்றப்பட்டது.இது மே 13,1638ஆம் ஆண்டு கட்டத்தொடங்கி 1648ல் கட்டிமுடிக்கப்பட்டது.இதில் உஸ்தாத் அஹமத் மற்றும் உஸ்தாத் ஹமித் அவர்கள்தான் முக்கிய கட்டிட கலைஞர் ஆவர்.இது யமுனை நதியின் பின்புறம் அமைந்துள்ளது.இதனின் சுவர்கள் சிவப்பு கல்லினால் கட்டப்பட்டது.இதற்கு இரண்டு வாயில்கள் உள்ளது,அவை லாகூர் வாயில் தில்லி வாயிலாகும்.இது 256 ஏக்கரில் எண்கோணத்தின் வடிவில் அமைந்துள்ளது.அக்கோட்டையில் உள்ள மயில் ஆசனத்தின் ஒருபகுதிதான் கோஹினூர் வைரமாகும்.ஆனால் அவ்வைரம் தற்போது இங்கிலாந்து ராணியிடம் உள்ளது.2007ல் பாரம்பரிய தளமாக செங்கோட்டை யுனெஸ்கோ(UNESCO)வினால் அறிவிக்கப்பட்டது.


Tuesday, 5 August 2014

முப்பரிமாண ஒளிப்படவியல்


முப்பரிமாண ஒளிப்படவியல் (holography) என்பது ஒன்றின் முப்பரிமாண ஒளிப்படத்தை சேமித்து இன்னொரு இடத்துக்கு பரிமாறக்கூடிய தொழில்நுட்பத்தைக் குறிக்கிறது. ஒரு பொருளின் அனைத்து பரிமாணங்களையும் இது பிரதிசெய்கிறது. அதனால் ஒரு பொருளை நேரடியாக பார்பப்தற்கு இணையாக ஒவ்வொரு கோணத்தில் அதன் தோற்றத்தை இது தோற்றுவிக்கிறது.



Monday, 4 August 2014

இரைப்பை

இரைப்பை நாம் சாப்பிடும் உணவை செரிக்கவைக்கும் ஒரு உறுப்பு.அதில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உள்ளது.இந்த அமிலம்தான் ப்ரோடேஸ் எனும் நொதி உள்ளது.இந்நொதியானது புரதங்களை உடைத்து செரிமானம் நடைபெற உதவுகிறது.நம் இரைப்பையில் 1.5 லிட்டர் அளவு உணவை தாக்குபிடிக்கமுடியும்.இரண்டு வாரத்திற்கு ஒருமுறை கோழை(mucus)அடுக்கு புதிதாக உருவாகிறது.நம் முகம் சிவக்கும்போது நம் இரைப்பையின் தசைகளும் சிவக்கும்.


Sunday, 3 August 2014

நண்பர்கள் தினம்

'நீங்கள் தனியாக இருக்கும் போது, நான் உங்கள் நிழலாக இருக்க வேண்டும்.
நீங்கள் அழ வேண்டும் என்றால், நான் உங்கள் தோளாக இருக்க வேண்டும்.
நீங்கள் கட்டி விரும்பினால், நான் உங்கள் தலையணையாக இருக்க வேண்டும்.
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், நான் உங்கள் புன்னகையாக இருக்க வேண்டும்.
ஆனால் எப்போது வேண்டுமானாலும் ஒரு நண்பராக இருப்பேன் உங்களுடன்.'

பன்னாட்டு நண்பர்கள் தினம் (International Friendship Day) ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் முதல் ஞாயிறு அன்று கொண்டாடப்படுகிறது. 1935ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் நாடாளுமன்றம், காங்கிரசு, ஆகஸ்டின் முதல் ஞாயிறை தேசிய நண்பர்கள் தினமாக அறிவித்தது. அன்று முதல், தேசிய நண்பர்கள் தினத்தைக் கொண்டாடுவது ஓர் வருடாந்திர நிகழ்வாக மாறியது.
இதனைப் பின்பற்றி உலகின் பல நாடுகளும் நண்பர்களுக்காக ஒருநாளை ஒதுக்கி கொண்டாடி வருகின்றன. 1997ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் வின்னி த பூ என்ற பொம்மை கரடியை உலகின் நட்பு தூதராக அறிவித்தது



நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் !

Friday, 1 August 2014

அடால்ப் ஹிட்லர்

அடால்ப் ஹிட்லர் உலகபோர்களில் உலகையே ஆட்டிபடைத்த சர்வாதிகாரி.இந்த உலகிற்கு அவரின் அகோரமுகம் மட்டுமே காட்டப்பட்டது.இரண்டாம் உலகபோரில் பீரங்கிகுண்டுகளாலும் துப்பாக்கி குண்டுகளாலும் புரட்டிபோட்டவர்,பிறர் கையில் கத்தி(blade)இருந்தால் பயப்படுவாராம்.முடிதிருத்தம் செய்வதற்கே பயப்படுவாராம்.அவர் ஒரு சாக்லேட் பிரியர்.தினமும் 2 lbs அளவு சாக்லேட் சாப்பிடுவாராம்.ஹிட்லருக்கு வரைவது என்றால் அவ்வளவு பிரியம்.அவர் வையன்னா(Vienna)வில் உள்ள ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமியில் சேர்வதற்காக இரண்டுமுறை விண்ணபித்தார்.ஆனால் அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கபட்டது.தினமும் காலை 4மணி முதல் பகல் 11மணி வரை தூங்குவார்.ஏனென்றால் அவருக்கு இருட்டு என்றால் பயம்.இந்த உலகிற்கு அவர் மீசை மட்டுமே பிடித்தமான ஒன்றாகிவிட்டது.