சத்ரபதி சிவாஜி அவர்களால் "இந்தியாவின் மிக வலுவான கோட்டை" என்றும் பிரிட்டிஷ் அரசால் "கிழக்கு டிராய்" என்றும் பெயரிடப்பட்ட கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செஞ்சி கோட்டை ஆகும்.இக்கோட்டை ஆனது முதன்முதலில் 9ஆம் நூற்றாண்டில் ஆனந்த கோனர் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.பின்பு 12ஆம் நூற்றாண்டில் சோழ மன்ன்ர்களால் கட்டிமுடிக்கபட்டது.இது மூன்று மலைகளில்மீது அமைந்துள்ளது.இது 800 அடி உயரத்தில் கட்டப்பட்டது.இக்கோட்டையை பாதுகாக்க கோட்டையைச் சுற்றி 80 அடி அகல அகழி உள்ளது.
இதில் ஏழு அடுக்கு கல்யாண மண்டபமும்,களஞ்சியமும்,சிறைச் செல்களும் அமைந்துள்ளது.அதுமட்டுமின்றி செஞ்சி அம்மனுக்கு ஒரு கோவிலும் உள்ளது.
1660-1677 ஆகிய காலகட்டத்தில் இக்கோட்டையை பிஜாபூர் நவாப் ஆண்டுவந்தனர்.அப்போழுது இதற்கு பட்ஸாபாத் என்று பெயர்.அதன்பின் மராத்தாஸ் சண்ட்ரி(chandry) அல்லது சிண்டி(chindy) என்று அழைத்தனர்.1968ல் முகலாயர்கள் இதனை நுஸ்ரத்காத் என்று அழைத்தனர்.கடைசியாக ஆங்கிலேயர்கள் மற்றும் பிரஞ்சுகாரர்கள் இதனை செஞ்சி அல்லது ஜிஞ்சி என்றனர்.
No comments:
Post a Comment