Wednesday, 6 August 2014

செங்கோட்டை

செங்கோட்டை,முகாலாய பேரரசர் ஷாஜகான் அவர்களால் கட்டப்பட்டது.அப்பொழுது தான் ஆக்ராவிலிருந்து தில்லி தலைநகராக மாற்றப்பட்டது.இது மே 13,1638ஆம் ஆண்டு கட்டத்தொடங்கி 1648ல் கட்டிமுடிக்கப்பட்டது.இதில் உஸ்தாத் அஹமத் மற்றும் உஸ்தாத் ஹமித் அவர்கள்தான் முக்கிய கட்டிட கலைஞர் ஆவர்.இது யமுனை நதியின் பின்புறம் அமைந்துள்ளது.இதனின் சுவர்கள் சிவப்பு கல்லினால் கட்டப்பட்டது.இதற்கு இரண்டு வாயில்கள் உள்ளது,அவை லாகூர் வாயில் தில்லி வாயிலாகும்.இது 256 ஏக்கரில் எண்கோணத்தின் வடிவில் அமைந்துள்ளது.அக்கோட்டையில் உள்ள மயில் ஆசனத்தின் ஒருபகுதிதான் கோஹினூர் வைரமாகும்.ஆனால் அவ்வைரம் தற்போது இங்கிலாந்து ராணியிடம் உள்ளது.2007ல் பாரம்பரிய தளமாக செங்கோட்டை யுனெஸ்கோ(UNESCO)வினால் அறிவிக்கப்பட்டது.


No comments:

Post a Comment