பராக்கா அணை (Farakka Barrage) கங்கை நதியின் குறுக்கே கட்டபட்டுள்ள அணைக்கட்டு ஆகும். இதுஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது வங்காள தேசம் நாட்டின் எல்லையிலிருந்து 16.5 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இவ்வணைக்கட்டானது 1961 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 1975 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணையானது 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தியதி செயல்படத் தொடங்கியது. இதன் நீளம் 2,240 மீட்டர்கள் ஆகும். வங்காளதேசம் மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையே நடைபெற்ற பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இந்த அணை கட்டப்பட்டது. அதன் பின்னர் வங்காள தேசம் பஞ்ச காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
No comments:
Post a Comment