எந்த ஒரு தமிழனாலும் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மனை மறக்க முடியாது.ஆங்கிலேயர்களுக்கு வரி கட்ட மறுத்து போரிட்டவர் என்று நாம் அனைவரும் வரலாற்றில் படித்திருப்போம்.அவரைப் பற்றி சில மறைக்கப்பட்ட வரலாற்றைக் காண்போம்.கட்டபொம்மன் ஆரம்ப காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு மறுப்பேதும் கூறாமல் 16 ஆண்டுகளாக வரி செலுத்தியுள்ளார்.ஆனால் கலெக்டர் ஜாக்சனிடமிருந்து வரியை கட்டுமாறு கடிதம் வந்தது.நாங்கள் இதுவரை எல்லா வரியையும் சரிவரகட்டியுள்ளோம் என்பதை விளக்கி கூற கலெக்டரை சந்திக்க முயன்றார்,கட்டபொம்மன்.ஆனால் அவருக்கு அனுமதி தராமல் மூன்று மாதங்களாக அலைக்களிக்கவிட்டது,ஆங்கிலேய அரசாங்கம்.இறுதியில் அனுமதி தரப்பட்டது.ஆனால் அங்கு கைகலப்பு ஏற்பட்டதால் வரி செலுத்தமுடியாது என்று ஆங்கிலேயர்களை எதிர்த்தார்,கட்டபொமம்மன்.பிறகு எட்டப்பன்னால் காட்டிகொடுக்கப்பட்ட கட்டபொம்மனை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர்.ஆனால் முதன்முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்த தமிழன் வீரபாண்டிய கட்டபொம்மன் என்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.இதுபோல் இன்னும் எத்தனை வரலாறுகள் நம்மிடமிருந்து மறைக்கப்பட்டனவோ என்று தெரியவில்லை!!
No comments:
Post a Comment