Friday, 26 December 2014

சுனாமி



2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் டிசம்பர் 2004ல் சுமாத்திரா தீவின் வடமேற்கு கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 150 கிமீ தூரத்தில் ஆழ்கடலில் நிகழ்ந்த நிலநடுக்கம் ஆகும். 9.3 புள்ளிகள் ரிக்டர் அளவில் வாய்ந்த நிலநடுக்கம் வரலாற்றில் நிலநடுக்கப் பதிவுக் கருவியில் ரிக்டர் அளவு எடுத்த நிலநடுக்கங்களில் இரண்டாம் மிக வலிமையாக நிலநடுக்கம் ஆகும்.

இந்த நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, இந்தியா, மாலைதீவுகள்ஆகிய நாடுகளைத் தாக்கியதில் 14 நாடுகளைச் சேர்ந்த 230,000 பேர் உயிரிழந்தனர்.

00:58:53 நேரம் டிசம்பர் 26, 2004 அன்று இந்தியப் பெருங்கடலில் சுமாரா தீவுக்கு மேற்கே, மேற்குக்கரையோரத்தில் 30 கிமீ ஆழத்தில் பெரிய நிலநடுக்கம் நிகழ்ந்தது. இது 9.3 ரிக்டர் அளவாக இருந்தது.


Tuesday, 9 December 2014

பெரும் தடுப்புப் பவளத்திட்டு



பெரும் தடுப்புப் பவளத்திட்டு (The Great Barrier Reef) உலகின் மிகப் பெரிய பவளப்பாறைத் திட்டுத் தொகுதியாகும். இது 2,900 தனித் திட்டுக்களையும், 2,600 கிமீ தூரம் நீண்டிருக்கும் 900 தீவுகளையும் கொண்டு ஏறத்தாள 344,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்துள்ளது. இது வடகிழக்கு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் பவளக் கடலில் அமைந்துள்ளது.

பெரும் தடுப்புப் பவளத்திட்டு, உயிரினங்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய ஒற்றை அமைப்பாகும். இதனை விண்வெளியில்இருந்தும் பார்க்க முடியும். இந்தப் பவளத்திட்டு அமைப்பு பல கோடிக்கணக்கான நுண்ணிய உயிரினங்களால் அமைக்கப்பட்டவை.உயிரியற் பல்வகைமைப்பட்ட உயிரினங்களின் வாழ்விடமாக உள்ள பெரும் தடுப்புப் பவளத்திட்டு 1981 ஆம் ஆண்டில் உலக பாரம்பரியக் களமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சி.என்.என் (CNN) எனப்படும் ஆங்கில மொழித் தொலைக்காட்சிச் சேவை இதனை உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்றாகத் தெரிவு செய்துள்ளது. குயீன்ஸ்லாந்தின் தேசிய நம்பிக்கை நிறுவனம் (Queensland National Trust) இதனை மாநிலத்தின் அடையாளச் சின்னமாக அறிவித்துள்ளது.


Tuesday, 18 November 2014

மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது

மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது (11 நவம்பர் 1888 – 22 பெப்ரவரி 1958) இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞரும் ஆவார். சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர். இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர்.பாக்கித்தான் பிரிவினையையும் அங்கு இராணுவ ஆட்சி ஏற்படப்போவதையும் முன்னரே தெரிவித்த பெருமை உடையவர்.உயிரோடு இருந்த போது இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட முடிவெடுக்கப்பட்டது. ஆனால் தாம் பாரத ரத்னா விருதின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தமையால் விருது பெற மறுத்துவிட்டார் அபுல் கலாம் ஆசாத்.1992ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா மறைந்த பிறகு வழங்கப்பட்டது. பரவலாக இவர் மௌலானா ஆசாத்என அறியப்படுகிறார்; ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும். இந்தியாவில் கல்வித்துறைக்கு சரியான அடித்தளமிட்ட இவராற்றிய பணியை நினைவுகூரும் வகையில் இவரது பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது. புதுதில்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் இவரது பெயரைத் தாங்கி உள்ளன.


Sunday, 16 November 2014

எகிப்து பிரமிடுகள்

எகிப்து கிசா"பிரமிட்" உலக அதிசயங்களில் ஒன்றாகும்.அதனுடைய கட்டமைப்பு ஒரு நேர்தியான கட்டமைப்பாகும்.அதை இந்த காலத்து வல்லுநர்களால் கூட உருவாக்க முடியாது.அவை 2,300,000 கற்களால் கொண்டு கட்டப்பட்டுள்ளது.அவை ஒவ்வொன்றும் 2 முதல் 30 டன் எடை கொண்டவை ஆகும்.அதில் உள்ள 7 கற்கள் 50 டன்னிற்கு மேல் எடை கொண்டவை ஆகும்.அவைகள் மெங்காவ்ரெ,கஃப்ரெ,குஃபு ஆகும்.பிரமிடின் உட்புறத்தில் வெப்பநிலை மாறாது.20 டிகிரி செல்சியஸ்,அதாவது பூமியின் வெப்பநிலை ஆகும்.அதன் ஒவ்வொரு மூளையில் கற்கள் வெப்பதில் விரிவடைதல் மற்றும் நிலநடுக்கம் ஆகியவற்றை தாங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.பிரமிட் மட்டுமே மிக துல்லியமாக வடதுருவம் நோக்கி அமைக்கப்பட்ட கட்டடம் ஆகும்.அவை 3/60த் டிகிரி மட்டுமே சற்று மாறி அமைந்துள்ளது.

Friday, 14 November 2014

குழந்தைகள் தினம்

உலகளவில், குழந்தைகள் தினம் நவம்பர் 20ஆம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்த தேதி குழந்தை பருவத்தை நினைத்து கொண்டாட ஒரு நாளாக தேர்ந்தெடுக்கப்பட்டது.முன்னதாக 1959 குழந்தைகள் தினம் அக்டோபர் மாதம் கொண்டாடப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் முடிவின்படி, 1954 ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
இந்த நாள் குழந்தைகள் மத்தியில்  பரிமாற்றம் மற்றும் புரிதல்களையும், அத்துடன் உலகம் முழுவதும், குழந்தைகள் நலனுக்கான நடவடிக்கை பற்றி கொண்டு ஒரே நோக்கத்தோடு நிறுவப்பட்டது.குழந்தை உரிமைகள் பிரகடனத்தை ஏற்றது ஐக்கிய நாடுகள் பொது சபை ஏற்கப்பட்டது போது அது, 1959ஆம் ஆண்டு நிறைவை குறிக்கும் என 20-ம் தேதி நவம்பர், தேர்வு செய்யப்பட்டது. 1989 ல் குழந்தைகள் உரிமைகள் குறித்து எப்போதும் 191 நாடுகள் ஒப்புதல் வருகிறது அதே தேதியில், ஒப்பந்தம் செய்யப்பட்டது.
கடந்த 20 நவம்பர் உலகளவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது எனினும், இந்தியாவில் இந்த நாள் கொஞ்சம் முன்னதாகவே நவம்பர் 14 அன்று கொண்டாடப்படுகிறது.இத்தேதி சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் - பண்டிட் ஜவகர்லால் நேரு.அவர்களின் பிறந்தநாளைக் குறிக்கிறது.

Thursday, 13 November 2014

ஆண்டோனியோ

வரலாற்றையே வியக்க வைத்த ஆண்டோனியோ, இசைக்கருவிகள் செய்பவர். 1644க்கும் 1737க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார். இவருடைய பேவரிட் இசைக்கருவி வயலின். தனக்கே உரிய ஸ்பெஷல் பார்முலா படி அவர் உருவாக்கிய வயலின்கள் அதி அற்புதம். அதை எப்படி உருவாக்கினார், என்ன கணக்கு வைத்திருந்தார் என்பதெல்லாம் அவர் வெளிப்படுத்தாத மாபெரும் ரகசியம்.பழைய வயலின்களின் பார்முலாக்களை இவர் ஒதுக்கித் தள்ளினார். தனக்கென சில ஐடியாக்களை உருவாக்கினார். கன கட்சிதமாக ஒவ்வொரு பாகத்தையும் உருவாக்கினார். இவருடைய இசைக்கருவியிலிருந்து ஒரு நூலிழை மாற்றத்தை ஏற்படுத்தினால் கூட இசை அபஸ்வரமாகி விடுகிறது. அந்த அளவுக்கு அவருடைய வயலின் உருவாக்கும் நேர்த்தி இருந்தது.AS14
இவருடைய வயலினில் இருந்து தெய்வீக இசை கசியும் என உருகுகின்றனர் இசை ரசிகர்கள். உலகின் பல இசை ஜாம்பவான்களுடைய இறுதி ஆசையே ஒருமுறையேனும் இவருடைய இசைக்கருவியில் இசைக்க வேண்டும் என்பது தான.இன்று வரை இவருடைய வயலின் தான் உலகில் நம்பர் 1. உலகிலேயே இவருடைய வயலின்கள் தான் அதிக பட்ச தொகைக்கு ஏலமிடப்படுகின்றன.
வயலின் மட்டுமன்றி கிடார், செலோஸ், வயலோஸ் என வேறு பல இசைக்கருவிகள் செய்வதிலும் இவர் கெட்டிக்காரர். இவருடைய வாழ்நாளில் ஆயிரத்து நூறுக்கு மேற்பட்ட இசைக்கருவிகளைச் செய்திருக்கிறார். 1698க்கும் 1730 க்கும் இடைப்பட்ட காலத்தில் இவர் செய்த இசைக்கருவிகள் தான் உலகிலேயே இன்று வரை சூப்பர் இசைக்கருவிகள்.
இவருடைய வயலினில் இருந்து எப்படி இந்த அற்புத இசை வருகிறது என நிபுணர்கள் ஆராய ஆரம்பித்து சில நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று வரை ரகசியங்கள் அவிழவில்லை. 

Wednesday, 12 November 2014

இந்தியாவின் குடியரசு தலைவர்கள்

1947 இல் இந்தியா சுதந்திரம் அடையும்வரை ஆங்கிலேயர்கள் தங்களுக்கு சாதகமாக அமைத்திருந்த சட்டங்களே இந்தியாவின் சட்டங்களாக இருந்தது. அதன்பின் இந்தியாவைக் குடியரசு நாடாகப் பிரகடனம் செய்வதற்காக இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் இந்திய அரசு ஈடுபட்டது. அதற்காக அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது.
புதிய அரசியல் சட்டத்தைத் தயாரிக்கும் பொறுப்பு டாக்டர் அம்பேத்காரிடம் ஒப்படைக்கப்பட்டது.
டாக்டர் அம்பேத்கார் உருவாக்கிய அரசியல் சட்டத்தை 1949 நவம்பரில் அரசியல் நிர்ணய சபை அங்கீகரித்தது. அதன்படி 1950 ஜனவரி 26 முதல்  இந்தியா குடியரசு நாடாகியது. இந்தியக் குடியரசின் முதல் ஜனாதிபதியாக கவர்னர் ஜெனரல் ராஜாஜி பொறுப்பேற்க வேண்டும் என்று நேரு விரும்பினார். ஆனால் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் இதை எதிர்த்தனர். 1942 இல்  நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ராஜாஜி எதிர்த்தார். எனவே அவரை ஜனாதிபதி ஆக்கக்கூடாது என்று அவர்கள் கூறினார்கள்.1942 இல்  பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கையையையும்  ராஜாஜி ஆதரித்தார். இதைக் காங்கிரஸ் எதிர்த்ததால் காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் ராஜாஜி விலகி இருந்தார். இதன் காரணமாக ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார். கவர்னர் ஜெனரல் என்ற பதவி அன்றுடன் முடிவடைந்தது.

இந்தியா சந்தித்த குடியரசுத்தலைவர்கள்

1)டாக்டர் ராஜேந்திர பிரசாத் - 1950-1962
2)டாக்டர் ராதாகிருஷ்ணன் - 1962-1967
3)டாக்டர் ஜாகிர் ஹுசேன் - 1967-1969
4)வி.வி.கிரி - 1969மே மாதத்திலிருந்து ஜூலை வரை தற்காலிகமாக)
5)ஹிதாயத்துல்லாஹ் 1969ஜூலை லிருந்து ஆகஸ்ட் வரை 
தற்காலிகமாக)
6)வி.வி.கிரி - 1969-1974
7)பகுருதீன் அலி அஹமத் 1974-1977
8)பி.டி. ஜாட்டி - 1977 ( பிப்ரவரியிலிருந்து ஜூலை வரை தற்காலிகமாக)
9)நீலம் சஞ்சீவ ரெட்டி - 1977-1982
10)கியானி ஜெயில் சிங் - 1982- 1987
11)ஆர்.வெங்கட்ராமன்- 1987-1992
12)டாக்டர் சங்கர் தயாள் சர்மா - 1992-1997
13)கே.ஆர்.நாராயணன் - 1997-2002
14)டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்- 2002-2007
15)பிரதீபா பாட்டில் - 2007 -2012
16)பிரனாப் முகர்ஜி-2012-(தற்போது வரை)

Tuesday, 11 November 2014

இந்தியாவில் நடந்த ஊழல்கள்

இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்கள் பற்றிய விவரம்:
       ஊழல்கள்                                                                         மதிப்பு
1.இந்தியன் வங்கி ஊழல்(1992)      -    1300 கோடி
2.சக்கரை இறக்குமதி(1994)              -     650 கோடி
3.ஜெ.எம்.எம் லஞ்சம்(1995)              -     1.2 கோடி
4.ஊறுகாயில் ஊழல்(1996)               -   10 லட்சம்
5.கால்நடைதீவனம் ஊழல்(1996)  -   950 கோடி
6.சி.ஆர்.பி ஊழல்(1997)                      -   1000 கோடி
7.பங்குசந்தை ஊழல்(2001)               -   1,15,000 கோடி
8.ஸ்டாம்ப் பேப்பர் ஊழல்(2003)      -  30,000 கோடி
9.ஸ்கார்பீன் நீர்மூழ்கி ஊழல்(2005)- 18,978 கோடி
10.அலிகான் வரி ஊழல்(2008)            - 50,000 கோடி
11.சத்யம் ஊழல்(2008)                          - 10,000 கோடி
12.2ஜி அலைகற்றை ஊழல்(2009)   - 1,76,000 கோடி
13.அரிசி ஏற்றுமதி ஊழல்(2009)        - 10.000 கோடி
14.ஒரிசா சுங்க ஊழல்(2009)               - 7000 கோடி
15.காமன்வெல்த் ஊழல்(2010)          - 40,000 கோடி
மற்றும் ஸ்விஸ் வங்கியில் 2008ஆம் ஆண்டு கணக்கிடப்பட்ட வங்கி இருப்பு விவரம்-71,00,000 கோடி
மொத்தமாக ஊழல்களினால் கொள்ளையடிக்கப்பட்ட தொகை
ரூ.910603234300000/-.அதாவது 20.23 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்.இந்த தொகையை வைத்து இந்தியாவில் ஒரே இரவில் வேலையின்மை மற்றும் ஏழ்மையை ஒழிக்கலாம்.


Monday, 10 November 2014

"துட்டன்காமன்"மம்மி

துட்டன்காமன்  18 வம்சத்தின் (ஆட்சி நரம்புகள் 1332 கிமு - வழக்கமான வரிசை 1323 கி.மு.) ஒரு எகிப்திய பாரோ இருந்தது.எகிப்திய வரலாற்றில் காலத்தில், புதிய கூட்டரசு எனப்படும். அவர் பிரபலமாக கிங் தூ என குறிப்பிடப்படுகிறதுis. அவரது உண்மையான பெயர்,துட்டன்காடென் , துட்டன்காமன் அதாவது போது "அமூனின் பட வாழ்க்கை" "எதன் பட வாழ்க்கை" என்று பொருள்.அவருடைய கல்லறையை 1922ல் ஹொவர்டு கார்டர் மற்றும் ஜியார்ஜ் ஹெர்பெர்ட் ஆகியோர் கண்டறிந்தனர்.அவருடைய  தங்கத்தாலான முகமுடி தற்போது கைரோ அருங்காட்சியகத்தில் இருக்கிறது.அவருடைய கல்லறையில் விலைமதிப்பில்லாத ஆபரணங்கள் உள்ளன.அதை அடைய சென்ற அனைவரும் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.ஆனால் அது உண்மை தகவல் இல்லை.

Sunday, 9 November 2014

புதைந்த நகரம்"மொகெஞ்சதாரோ"

ஒரு நன்கு திட்டமிடப்பட்ட தெரு கட்டம் மற்றும் ஒரு விரிவான வடிகால் அமைப்பு கொண்ட பண்டைய சிந்து சமவெளி நாகரிகம் நகரம் தான் மொகெஞ்சதாரோ.தண்ணீர் கட்டுப்பாட்டைப்பற்றி அறிந்த திறமையான நகரமாக இருந்தது.இந்த நகர் பற்றிய ஆராய்ச்சி மட்டும் புரியாத புதிராகவே உள்ளது.நகரத்தில் ஆடம்பரமாகவும் அரண்மனைகள், கோயில்கள், அல்லது நினைவுச்சின்னங்கள் இல்லை. அரசாங்கம் அல்லது ஒரு ராஜா அல்லது ராணி சான்றுகள் எந்த தெளிவான மத்திய இருக்கை இல்லை.தூய்மையை வெளிப்படையாக விரும்பப்படுகிறது. மட்பாண்டம் மற்றும் தாமிரம் மற்றும் கல் கருவிகள் போன்றவைகள் தான் உள்ளன.தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்  1911ல் முதன்முதலாக இந்த இடத்தை ஆராய்ந்தனர்.இங்குவசித்த அனைவரது வீட்டிலும் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Monday, 3 November 2014

மச்சு பிச்சு



மச்சு பிச்சு (Machu Picchu) என்பது கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம் ஆகும். இது பெரு நாட்டில் உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலுள்ள மலைத் தொடரில் கஸ்கோ நகரில் இருந்து 80 கிமீ வடமேற்கே காணப்படுகிறது. பொதுவாக "இன்காக்களில் தொலைந்த நகரம்" என அழைக்கப்பட்டு வந்த மச்சு பிக்ச்சு இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படுகிறது.

இது 1450ம் ஆண்டில் கட்டப்பட்டு நூறாண்டுகளின் பின்னர் இன்கா பேரரசை ஸ்பானியர்கள் கைப்பற்றியதில் இருந்து கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்தது. பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த இந்த நகரத்தை1911 இல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் மீளக் கண்டுபிடித்தார். அதன் பின்னர் இது ஒரு சுற்றுலாப் பயணிகளின் ஒரு முக்கிய இடமாக மாற்றப்பட்டது. இந்நகரம் 1867ம் ஆண்டிலேயேஜெர்மனியின் ஆகுஸ்டோ பேர்ன்ஸ் என்னும் பெரும் வர்த்தகரால் கண்டுபிடிக்கப்பட்டு கைவிடப்பட்டதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது

Sunday, 2 November 2014

ஹார்லி டேவிட்சன்

1901 இல் வில்லியம் எஸ் ஹார்லி, வால்டர் டேவிட்சன் மற்றும் ஆர்தர் டேவிட்சன் மில்வாக்கி, அமெரிக்காவில் தங்கள் முதல் இருசக்கர வடிவமைக்கப்பட்ட  ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தொடங்கப்பட்டது.முதல் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் மட்டும் (ஒரு சைக்கிள் ஃப்ரேம் உள்ள) பெடல் இருந்தது இன்னும் ஒரு மிக சிறிய பொறி (116 சிசி) இருந்தது. 1914 ல், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தில் சைட்கார்கள் செய்யப்பட்டது. நிறுவனம் தொடங்கியதில் இருந்து அவர்கள் நிறைய மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்தாலும் எனினும் அவைகள்  பொதுவாக ஸ்போர்ட்ஸ்டெர்ஸ்(Sportsters),ஸாஃப்டெயில்ஸ்( Softails), டூரிங் மாதிரிகள், புரட்சி மாதிரிகள் மற்றும்டைனாஸ்( Dynas) இவை ஐந்தாக பிரிக்கலாம். ஹார்லி டேவிட்சன் கூட  அதன் ரசிகர்கள் மற்றும் பின்பற்றுபவர்கள் மத்தியில் 'ஹார்லி' அல்லது 'எச்டி' என்று அழைக்கப்படும்.பைக் பிரியர்களுக்கு ஹார்லி டேவிட்சன் என்றால் உயிர்.

Saturday, 1 November 2014

ஆஸ்கர் தமிழன்

அல்லா ரக்கா ரகுமான்(A.R.Rahman),இவரைப் பற்றி தெரியாதவர் எவரும் இல்லை.இவர் ஒரு உலகமறிந்த இசையமைப்பாளர் ஆவார்.இவர் 1967 ஜனவரி 6ஆம் தேதி சென்னையில் ஆர்.கே.சேகர்-கரிமா(கஸ்தூரி) தம்பதியினர்க்கு பிறந்தார்.இவர் தந்தையும் இசையமைப்பாளர் ஆவார்.ரகுமானின் இயற்பெயர் திலிப் குமார் ஆகும்.அவருடைய ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார்.அதற்கு பிறகு இசைக் குழுக்கலில் சேர்ந்து இசையமைத்து கொண்டிருந்தார்.தன்னுடைய 23ஆவது வயதில் இஸ்லாம் மதத்திர்க்கு மாறி தன் பெயரை அல்லா ரக்கா ரகுமான் என மாற்றிகொண்டார்.இவர் முதலில் விளம்பரங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்தார்.1992ல் மணிரத்னம் அவர்கள் இயக்கிய படம்"ரோஜா"வில் இசையமைபாளராக அறிமுகம் ஆனார்.இவர் இசையமைத்த அனைத்து படப்பாடல்களும் பட்டிதொடிவரை அனைவராலும் விரும்பப்பட்டது.அதற்கு பிறகு இந்தி,மலையாலம்,தெலுங்கு போன்ற பிறமொழி படங்களுக்கும் இசையமைத்தார்.2009ல் இவர் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லியனர்(Slumdog Millionaire)படத்திற்காக ஆஸ்கர்(Oscar),கிராமி(Grammy)போன்ற உயரிய விருதுகளைப் பெற்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தார்.ஆஸ்கர் விருது வென்ற ஒரே தமிழர் இவர் மட்டுமே ஆவார்.

Thursday, 30 October 2014

நோபல் பரிசுபெற்ற இந்தியர்"வெங்கட்ராமன்"

வெங்கட்ராமன் "வெங்கி" ராமகிருஷ்ணன் (1952ல் பிறந்தார்) ரைபோசோம் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் பற்றி ஆய்வுகள் மேற்கொண்டார்,தாமஸ் ஏ ஸ்டெய்ட்ஸ்  மற்றும் அடா ஈ யோனத்  உடன் வேதியியலில் 2009ல் நோபல் பரிசை பகிர்ந்துகொண்டார்.இவர் ஒரு அமெரிக்கவாழ் இந்தியர்,அவர் தற்போது கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து MRC ஆய்வுக்கூடம் மூலக்கூறு உயிரியலில் தனது ஆராய்ச்சியை தொடர்கிறார்.ராமகிருஷ்ணன்  சி.வி. ராமகிருஷ்ணன் மற்றும் ஆர்.ராஜலட்சுமி தம்பதியினற்கு,இந்தியாவின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிறந்தார். அவரது பெற்றோர்கள் இருவரும் விஞ்ஞானிகளாக இருந்தனர்.

Wednesday, 29 October 2014

உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) ஐக்கிய நாடுகளின் ஓர் அமைப்பாகும். இந்நிறுவனம் அனைத்துலக பொதுச் சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது. ஏப்ரல் 7, 1948ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில்அமைந்துள்ளது. இந்த அமைப்பானது ஐக்கிய நாடுகளின் முன்னோடியான லீக் ஒப் நேஷன்ஸ் என்கின்ற அமைப்பு இருந்தபோது இருந்த சுகாதார அமைப்பின் வழிவந்ததாகும்.

Tuesday, 28 October 2014

ஜோனாஸ் எட்வர்ட் சால்க்

ஜோனாஸ் எட்வர்ட் சால்க்(அக்டோபர் 28, 1914 - 1995 ஜூன் 23) ஒரு அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர் மற்றும் வைராலஜிஸ்ட். அவர்தான் முதல் வெற்றிகரமான  போலியோ மருந்தை உருவாக்கினார். அவர் யூத பெற்றோருக்கு நியூயார்க் நகரில் பிறந்தார். அவர்கள் சிறிய முறையான கல்வி இருந்தது என்றாலும், அவரது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெற்றி பார்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். மருத்துவம், நியூயார்க் பல்கலைக்கழகம் பள்ளியில் பயின்றார்.இன்று அவருடைய பிறந்த தினம்.

Monday, 27 October 2014

மேதா பட்கர்



மேதா பட்கர் (திசம்பர் 1, 1954) இந்தியாவில் பரவலாக அறிந்த குமுக உரிமைப் போராளி. குசராத் மாநிலத்தில் உள்ள நர்மதா ஆற்றில் கட்டப்படும் சர்தார் சரோவர் அணைக்கு எதிராக மக்கள் சார்பாக உரிமைக்குரல் நிறுவனமான நர்மதா பச்சாவோ அந்தோளன் என்னும் அமைப்பால் நன்கு அறியப்பட்டவர்.


மேதா பட்கர் 1991 ஆம் ஆண்டுக்கான ரைட் லைவ்லிஃகூடு பரிசு (Right Livelihood Award) பெற்றார். 1999 ஆம் ஆண்டு விச்யில் இந்தியா இயக்கம் (Vigil India Movement) நிறுவனத்தின் எம்.ஏ. தாமசு மனித உரிமைப் பரிசு (M.A.Thomas National Human Rights Award) பெற்றார். இவை தவிர பற்பல பரிசுகளும் பெருமைகளும் பெற்றுள்ளார். அவற்றுள் தீனா நாத் மங்கேழ்ச்கர் பரிசி (Deena Nath Mangeshkar Award), மகாத்மா பூலே பரிசு (Mahatma Phule Award), கோல்டுமன் சூழல்நலப் பரிசு (Goldman Environment Prize) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவர் அணைகளுக்கான உலக ஆணையம் (World Commission on Dams) என்பதன் ஆணையர். ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக வடகிழக்கு மும்பைத் தொகுதியில் நாடாளுமன்றத்தேர்தலுக்குப் (2014) போட்டியிடுகிறார்.


Saturday, 18 October 2014

கைலாசு சத்யார்த்தி



கைலாசு சத்யார்த்தி (பிறப்பு 11 சனவரி 1954) இந்திய சிறுவர் உரிமைகளுக்கான செயற்பாட்டாளரும் அமைதிக்கான நோபல் பரிசு வாகையாளரும் ஆவார். 1990 களிலிருந்து சிறுவர்களை தொழிலாளர்களாகப் பணிப்பதை எதிராகப் போராடி வருகிறார். இவரது அமைப்பு பச்பன் பச்சாவ் அந்தோலன், (இளமையைக் காப்பாற்று இயக்கம்) 80,000கும் மேற்பட்ட சிறுவர்களை பல்வேறு வகை சேவைப்பணிகளிலிருந்து தடுத்து அவர்களது மீள்வாழ்வு, மீளிணைப்பு மற்றும் கல்விக்கு வழிவகுத்துள்ளது.2014 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு மலாலா யூசப்சையி உடன் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளார்.

இவர்தம் சீரியப் பணிக்கு தேசிய, பன்னாட்டு விருதுகளைப் பெற்றுள்ளார்.



Wednesday, 15 October 2014

கொனார்க் சூரியன் கோவில்

கொனார்க் சூரியன் கோவில் (Konark Sun Temple) இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ளது. இக்கோவில் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில் சிவப்பு மணற்பாறைகளாலும் கருப்பு கிரானைட் கற்களாலும் கட்டப்பட்டது. கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர்வடிவ சூரியன் கோவில். இது கிழக்கு கங்க வம்சத்தைச் சேர்ந்த முதலாம் நரசிம்ம தேவன் என்ற மன்னனால் உருவாக்கப்பட்டது. "இங்கே, கல்லின்மொழி மனிதனின் மொழியை தாண்டிச்செல்கிறது" என்று வியந்து கூறியிருக்கிறார், மகாகவி ரவீந்திரநாத் தாகூர். இப்படி அவரை வியக்க வைத்தவை, கொனார்க் சூரியபகவான் கோவில் சிற்பங்கள். இந்தியாவில் சூரியபகவானுக்காக அமைக்கப்பட்டு எஞ்சி நிற்கும் கோவில் கொனார்க் சூரியக்கோவில் மட்டுமே. சிறப்புக்குரிய இந்தக் கோவிலை யுனெஸ்கோ அமைப்பு 'உலகப் பண்பாட்டுச் சின்னமாக' 1984ம் ஆண்டில் அறிவித்தது. கோவிலை சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.



Friday, 10 October 2014

அந்தீசு மலைத்தொடர்

அந்தீசு மலைத்தொடர் (Andes) உலகின் மிக நீளமான மலைத் தொடர் ஆகும். இது, தென் அமெரிக்காவின், மேற்குக் கரையோரமாகத் தொடரான உயர்நிலப் பகுதியை உருவாக்குகின்றது. 7,000 கி.மீ (4,400 மைல்கள்) நீளமும், சில பகுதிகளில் 500 கி.மீ வரை அகலமும் கொண்ட ஆண்டீய மலைத்தொடர் சராசரியாக 4,000 மீட்டர் உயரமானது. நில கிடைவரைக் கோடுகள் தெற்கு 18° முதல் 20° வரையில் உள்ள பகுதிகள் மிக அகலமானவை அந்தீசு மலைத்தொடரில் மிகவும் உயரமான மலை முகடுஅக்கோன்காகுவா (உயரம் 6,962 மீ) ஆகும். இமயமலைத் தொடருக்கு அடுத்தாற்போல் உலகிலேயே அதிக உயரமான மலைகள் இந்த அந்தீசு மலைத்தொடரில்தான் உள்ளன. உயரத்தில் இமயமலையை நெருங்க முடியாவிட்டாலும், நீளத்தில் இம்மலைத்தொடர் இமயமலைத்தொடரைப்போல இரு மடங்கு நீளமானது. அகலத்திலும் இமயமலைத்தொடருக்கு ஈடாக நிற்பது. அந்தீசு மலைத்தொடரானது தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினா, பொலிவியா, சிலி, கொலம்பியா, ஈக்வெடோர்,பெரு,வெனிசூயெலா ஆகிய ஏழு நாடுகள் ஊடாக எழுந்து நிற்கின்றது. உயர்மலைகளைக் கொண்ட இந்நாடுகளை அந்தீசு நாடுகள் என்று அழைப்பதும் வழக்கம்.


ஆர். கே. நாராயணன்



ஆர். கே. நாராயணன் (ஆர். கே. நாராயண்) என்னும் ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணசாமி (10 அக்டோபர் 1906-13 மே 2001) உலக அளவில் புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர், இந்திய நாவல் ஆசிரியர் ஆவார். பிரபல கார்டூனிஸ்ட் ஆர். கே. லஷ்மண் இவரது தம்பியாவார்.

இவரின் உணர்ச்சிப்பூர்வமான நாவல்கள் 20 ஆம் நூற்றாண்டு இந்தியரின் வாழ்கையைப் பிரதிபலிக்கும் மால்குடி எனும் கற்பனைக் கிராமத்தைத் தழுவி எழுதப்பட்டவையாகும். முல்க் ராஜ் ஆனந்த் மற்றும் ராஜா ராவ் ஆகியோருடன் இவர் 20 ஆம் நூற்றாண்டின் மூன்று சிறந்த இந்திய-ஆங்கில மொழி எழுத்தாளர்களில் ஒருவர்.

எழுத்தில் மால்குடி என்ற கற்பனை நகரை உருவாக்கி, உலகம் முழுவதும் உள்ள வாசகர்களை ரசிக்க வைத்தவர். கிரஹாம் கிரீன், ஈ.எம். பாஸ்டர், சோமர் செட் மாம், மால்கம் முகரிட்ஜ் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் இவரது ரசிகர்கள். பல சிறு கதைகளும், புதினங்களில் உள்ள பகுதிகளும் தொலைக்காட்சி நாடகங்களாக நடிக்கப்பட்டன.கைடு (வழிகாட்டி) புதினத்திற்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. இவ்விருது பெற்ற முதல் ஆங்கில நூல் இதுதான். 1964 ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. நோபல் பரிசுக்காக இருமுறை பரிந்துரைக்கப்பட்டவர்.





Thursday, 9 October 2014

டைட்டானிக்

டைட்டானிக்,இந்த  உலகின் மிக பிரம்மண்டமான கப்பல் மற்றும் அதை தழுவி வந்த மாபெரும் வெற்றிபடத்தையும் அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது.அவ்வளவு பெரிய கப்பலை எளிதாக முழ்கடித்துவிட்டது ஒரு பனிப்பாறை.அதில் பயனம் செய்த மக்களின் உயிரையும் பறித்துக்கொண்டது.அதில் போதிய அளவு உயிர் காக்கும் படகுகள் இல்லாததே அத்தனை பேரின் உயிர் இழப்பிற்கு காரணம்.டைட்டானிக் கப்பலை விட அந்த படத்தை தயாரிப்பதற்கு தான் அதிகம் செலவு ஆகியுள்ளது.கப்பல் முழ்குவதில் இருந்து உயிர் பிழைத்த ஜப்பானியர்களை அன்னாட்டு மக்கள் கோழை என்று அழைக்கிறார்கள்.

Wednesday, 8 October 2014

இராஜ நாகம்

இராஜ நாகம்,உலகிலேயே மிகப்பெரிய விஷப்பாம்பாகும்.இது சாதாரனமாக 6 அடி வரை வளரக்கூடியது ஆகும்.இந்த ஒரு இனம் மட்டும்தான் மற்ற பாம்பு வகைகளைக் கொன்று சாப்பிடும்.அதில் விஷப்பாம்புகளும் அடங்கும்.இதனுடைய விஷம் ஒரு யானையை கொல்லும் அளவுக்கு மிகக்கொடியது.மற்ற பாம்பு வகைகளைப் போன்று இவைகளும் தங்களுடைய விஷ அளவைக் கட்டுபடுத்தும் திறன் கொண்டது.இவைகள் சில நேரம் தங்களுடைய விஷத்தை மனிதன்மீது செலுத்தாமல் கூட போகலாம்.இவைகள் கூடு கட்டி தங்கள் குட்டிகளைப் பாதுகாக்கும்.


Tuesday, 7 October 2014

பனாமாவின் கோல்டன் தவளை

தவளையின் ஒரு அற்புதமான இனங்களிலொன்று பனாமாவின் கோல்டன் தவளை.இவற்றிற்கு காதுகள் கிடையாது.அதற்கு பதிலாக அவைகள் தங்கள் நுரையீரல் உதவியுடன் கேட்கும் ஆமாம், அந்த நுரையீரல் மிக அற்புதமான வழியில் அவர்களுக்கு பல பணிகளை செய்கிறது.. இந்த தவளைகள்மட்டுமே அதே செயல்பாடு கொண்டவை அல்ல, அதே முறையில் கேட்கும் திறன் கொண்ட   பல மீன்களும் உள்ளன.

Wednesday, 1 October 2014

பாபிலோனின் தொங்கும் தோட்டம்



பாபிலோனின் தொங்கும் தோட்டம் (Hanging Gardens of Babylon) (செமிராமிஸின் தொங்கு தோட்டம் எனவும் அறியப்படுகிறது) பாபிலோனின் சுவர்களும் பண்டைய ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவ்விரண்டும் நெபுச்சட்னெசாரால் (Nebuchadnezzar) தற்போதைய ஈராக் நாட்டினுள் அடங்கும் பாபிலோனில் கி.மு 600அளவில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. எனினும் இது உண்மையிலேயே இருந்ததா என்பது பற்றிய சந்தேகமும் இன்னும் உள்ளது.

ஸ்ட்ராபோ (Strabo), டையோடோரஸ் சிகுலஸ் (Diodorus Siculus) போன்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர்களால் விரிவாகப் பதியப்பட்டுள்ள இத் தொங்கு தோட்டம் இருந்தது பற்றி, பாபிலோனிலிருந்த மாளிகையில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மேலோட்டமான சில சான்றுகள் தவிர, வேறு சான்றுகள் மிகக் குறைவாகவேயுள்ளன. இது பற்றிய வியத்தகு விவரணங்களை நியாயப்படுத்தக் கூடிய போதிய சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை.


Tuesday, 30 September 2014

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் இந்திய சுதந்திரத்திற்காக நிறைய பாடுப்பட்டார்.அவரைப் பற்றி அறியாத செய்திகளை இங்கு காண்போம்.அவர் சிறு வயதிலேயே படிப்பில் நன்கு தேர்ச்சி பெற்றவர்.இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளில் 4ஆம் இடம் பெற்றார்.ஜாலியன்வாலாபாஃக்கில் நடந்த படுகொலையால் அவர் அதற்கு மேல் தொடர விரும்பவில்லை.அவர் அகில இந்திய காங்கிரஸின் தலைவராக இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டார்.ஆனால் இவரை காந்தி மற்றும் அவரது தொண்டர்களுக்கு பிடிகாத காரணத்தினால் இவர் அந்த பதவியை இராஜினாமா செய்தார்.இவர் 1945ல் நடந்த விமான் விபத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.ஆனால் இவர் இறக்கவில்லை என்று  நிறைய பேர் கூறுகின்றனர்.இவர் அந்த விமான விபத்தில் இறந்ததற்கான ஆதாரம் எதுவுமில்லை.இவர் 1985 வரைக்கும் உ.பி.யில் ஃபைசாபாத்தில் குன்மனி பாபாவாக வாழிந்ததாக கூறபடுகின்றது.ஆனால் அதுவும் உண்மையா என்பது யாருக்கும் புரியாத புதிராகவே இருக்கின்றது.அது மட்டுமின்றி இந்திய தேசிய இரானுவத்தையும் தோற்றுவித்தவரும் நேதாஜி தான்.

Sunday, 28 September 2014

இரட்டை கோபுரங்கள்

இதுவரை வெளிவராத தகவல்கள் அடங்கிய விறுவிறுப்பான கட்டுரை

இரட்டை கோபுரத்தை இடித்தது யார் என்று கேட்டால் அனைவரும் சொல்வது ஒசாமா பின்லேடன். ஒரு வீட்டை இடிப்பதற்க்கே 20லிருந்து 30 நபர்கள் தேவைப்படும்போது, உலகத்திலேயே மிக உயர்ந்த கட்டிடம் என்று பெயர் பெற்ற ஒரு கட்டிடத்தை ஒரு தனி மனிதனால் இடித்து தரை மட்டமாக்க முடியுமா? முடியாது என்பதே பலரின் பதில். இரட்டை கோபுரத்தை இடித்ததில் தனி ஒரு மனிதனின் பெயரை குறிப்பிடுவதை விட அதை செய்தது ஒரு கூட்டம் என்று சொல்வதே சரியானது.

அப்படியானால் இரட்டை கோபுரத்தை இடித்தது எந்த கூட்டம்? அலசுவோம் வாருங்கள்...

இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நிகழ்விற்க்குப் பிறகு நடந்த சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தோமேயானால், இடித்தது எந்த கூட்டம் என்ற முடிவுக்கு வரலாம்: இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதில் பலருக்கும் பல சந்தேகம் உள்ளது.

அமெரிக்காவில் உள்ள 75 பேராசிரியர்கள் (PROFESSOR) இந்த சம்பவம் அமெரிக்காவின் உள்வேளை(PROFESSOR) என்றார்கள்.

இரட்டை கோபுரத்தில் உள்ள இரும்பு தூண்... (பார்க்க படம் : 2)

ஸ்டீவ் ஜோன் என்ற (PROFESSOR) கூறுகிறார்: 19 நபர்கள் சேர்ந்து இவ்வளவு பெரிய காரியத்தை செய்ய சாத்தியம் இல்லை. இரட்டை கோபுரத்தில் உள்ள இரும்பு தூணானது ஜெட் பெட்ரோலினால் எதுவும் ஆகாது. அதுவும் இரட்டை கோபுரம் சரிந்ததை பார்த்தோமேயானால், அங்கே வெடிகுண்டு உபயோகப்படுத்தப்பட்டுள்ளதை அறியலாம். அவ்வாறு சொன்னதால் அவர் வேளை நீக்கம் செய்யப்பட்டார். இரட்டை கோபுரத்தின் தூண்கள் அதிக வலிமையுடன் கட்டப்பட்டது. அதனை விமானத்தின் பெட்ரோலால் எரிக்க முடியுமா என்றால், அது முடியாது என்பதுதான் பதில். விமானத்தின் பெட்ரோல் 1000 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உள்ளது. இரட்டை கோபுரத்தின் தூண்களை 2000 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தால் கூட எரிக்க முடியாது என்று அமெரிக்க நாட்டின் இரட்டை கோபுரத்தை கட்டிய கம்பெனி கூறியது. 10 நாட்கள் பிறகு, விமானத்தின் பெட்ரோல் இரட்டை கோபுரத்தின் தூண்களை எறிக்கும் என்றது. இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள்?

விமானம் வளைந்த விதத்தை பற்றிய புகைப்படம். (பார்க்க படம் : 3)

விமானம் வளைந்த விதத்தை பற்றி விமான ஓட்டுனர் பலரிடும் கேட்டால், பயணிகள் விமானத்தை அவ்வாறு வளைப்பது சாத்தியமற்றது. ராணுவ விமானத்தை மட்டும் அவ்வாறு வளைக்க முடியும் என்கிறார்கள், என்பார்கள். (இதை யூத விமானியிடம் கேட்க கூடாது)

அடுத்து அவர்கள் சொல்லகூடிய முக்கிய தடையம் போன்.

பயணிகள் சிலர் தாங்கள் கடத்தப்பட்டுள்ளதை(!) வீட்டிற்கு தெரியப்படுத்துகிறார்கள். ஒரு போன், அம்மா! நான்தான் மார்க் பீகம். அம்மா! நான் பேசுவது கேட்கிறதா? அம்மா!.. அம்மா!.. (mom I am mark beegham. Can you hear me. Mao! Mom!.) மொபைல் துறையில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களிடம் சென்று கேளுங்கள், 32000 அடி உயரத்தில் மொபைலில் எத்தனை % நெட்வர்க் கிடைக்கும் என்று. நன்றாக தெரிந்துக்கொள்ளுங்கள்: 4000 அடியில் .04 % நெட்வர்க்தான் கிடைக்கும். 8000 அடியில் .01% நெட்வர்க்தான் கிடைக்கும். 32000 அடியில் .006% நெட்வர்க்தான் கிடைக்கும். நன்றாக சிந்தியுங்கள் சகோதரர்களே! 0% என்றால் நெட்வர்க்கே கிடைக்காது, .006% என்றால்?

கருப்புப்பெட்டி (பார்க்க படம் : 6)

விமானம் விபத்துக்குன்டானால் முக்கிய தடையமாக கருதுவது அதன்கருப்புப்பெட்டி. ஒவ்வொரு விமானத்திலும் 2 கருப்புப்பெட்டி இருக்கும். கருப்புப்பெட்டியானது 3000 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்திலும் எதுவும் ஆகாது. அவ்வாறு இருக்க 1000 டிகிரி சென்டிகிரேட்-ல் கருப்புப்பெட்டி அழிந்து விட்டது என்று கூறுவது எவ்வளவு பெரிய பொய்.

இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு 2 நாட்களுக்குப் பிறகு வும்ம என்ற பத்திரிக்கைக்கு ஒசாமா பின்லேடன் அழித்த பேட்டியில் குழந்தைகளையும், பெண்களையும், அப்பாவிகளையும் கொள்வது இஸ்லாம் தடை செய்துள்ளது என்றார். இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடன்தான் காரணம் என்று காட்டிய ஊடகங்கள், அவர் அழித்த பேட்டியை காண்பித்ததா?. அல்-ஜஸிரா ஊடகத்தை தவிர.

ஒசாமா பின்லேடன் மீது அநியாயமாக பழியைப்போட்டது, ஆப்கானிஸ்தானில் உள்ள பெட்ரோல் வளத்தை கைப்பற்றவே அன்றி வேறு காரணமில்லை...

ஒசாமாநல்லவரா? கெட்டவரா? என்கின்ற விவாதத்திற்கு நான் வரவில்லை , அதனை காரணம் காட்டி ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குற்றம் கூறுவது நியாயமா?????????


இப்பொழுது சொல்லுங்கள்! இரட்டை கோபுரத்தை இடித்தது யார்?..

உலக வர்த்தக மையம் மீது தொடுக்கப்பட்ட 9/11 தாக்குதலின் பின்னணியில் இருந்தது இஸ்ரேல்தான். அமெரிக்க மக்களுக்கு இது ஐயமின்றித் தெரியவரும்போது இஸ்ரேல் இருந்த இடம் தெரியாமல் நிர்மூலமாகிவிடும்" என அமெரிக்கக் கடற்படைத்துறை நிபுணரும் பிரபல எழுத்தாளருமான ஸப்ரொஸ்கி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
அலன் ஸப்ரொஸ்கி

அமெரிக்காவின் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற வளவாளரும் எழுத்தாளருமான அலன் ஸப்ரொஸ்கி மேலும் குறிப்பிடுகையில் "கடந்த இரு வாரங்களாக கப்பற்படைத் தலைமையகத்தில் உள்ள இராணுவக் கல்லூரியுடன் தொடர்ச்சியான நீண்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டுவந்தேன்.

அதன் விளைவாக 9/11 தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேலிய மொசாட் இருப்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்திக்கொண்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.


தான் இதுபற்றிய தேடலில் இறங்கியபோது தற்போதும் இராணுவப் படையணிகளில் உள்ள தன்னுடைய நண்பர்கள் ஆரம்பத்தில் தன்மீது சந்தேகம் கொண்டதாகவும் பின்னர் தாக்குதல் நடைபெற்றுள்ள விதம் குறித்து தான் விரிவாக விளக்கியதும் தன்மீதான அந்த சந்தேகம் மாறி கடுஞ்சீற்றம் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"அவர்கள் முதலில் என்னை நம்பவில்லை. உடனே நான் அவர்களுக்கு டென்மார்க் நாட்டு கட்டிட இடிபாடுகள் தொடர்பான நிபுணர் டென்னி ஜொவென்கோ 9/11 தாக்குதலின் பின் வழங்கிய நேர்காணலைப் போட்டுக் காட்டினேன்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

"செப்டெம்பர் 11 தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல்தான் இருக்கிறது என்பதை அமெரிக்க மக்கள் ஐயம் திரிபறத் தெரிந்துகொள்ளும்போது அவர்கள் இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமலாக்கிவிட எள்ளளவும் தயக்கம் காட்டமாட்டார்கள்" என்று ஸப்ரொஸ்கி அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார்.
2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையமான இரட்டைக் கோபுரங்கள் மீதும் அமெரிக்கப் பாதுகாப்பு மையமான பென்டகன் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 3000 பேர் உயிரிழந்ததாகவும் ஏராளமானோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அல்கைதாவே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக ஜோர்ஜ் புஷ் தலைமையிலான அமெரிக்க அதிகாரத் தரப்பு குற்றஞ்சாட்டியது. அதுமட்டுமன்றி "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்" என்ற போர்வையில் ஈராக் ஆப்கானிஸ்தான் முதலான நாடுகள் மீது படையெடுப்புக்களை மேற்கொண்டு அந்த நாடுகளை நிர்மூலமாக்குவதில் முனைப்போடு ஈடுபட்டது. அன்றுமுதல் இன்றுவரை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் பல்வேறுவகையான ஒடுக்குமுறைகளையும் அவமானகளையும் எதிர்கொள்ள நேர்ந்து வருகிறது. இந்நிலையில்இ அலன் ஸப்ரொஸ்கியின் பகிரங்கமான அறிக்கை உலக அளவில் பல்வேறு அதிர்வலைகளை எழுப்பியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

முன்னாள் மலேசிய பிரதமரான மகாதிர் முஹம்மது தன்னுடைய சொந்த வலைப்பூவான செதேட்டில், இரட்டை கோபுரம், நியூயார்க் நகர், பெண்டகன் மற்றும் விர்ஜினியாவில் நடத்தப்பட்ட 9/11 தாக்குதல்களை நடத்தியது முஸ்லிம்கள் அல்ல என்றும் இத்தாக்குதல் குறித்து அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ் பொய் கூறியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, 9/11 தாக்குதலில் கொல்லப்பட்ட 3000 மக்களின் மரணத்தை நினைத்து அச்சம் கொள்வதைவிட அதை நடத்தியது அமெரிக்க அரசு என்பதில்தான் அச்சப்பட வேண்டியுள்ளது. அரபு முஸ்லிம்கள் தங்களின் உயிரை தியாகம் செய்ய தயாராய் இருப்பவர்கள் என்பது உண்மை என்றாலும் இவ்வளவு துல்லியமாக தாக்குதலை நடத்தக்கூடிய அளவுக்கு அவர்கள் திறமை வாய்ந்தவர்கள் அல்லர். இத்தாக்குதல் நடத்த நீண்ட காலமாக திட்டமிடல் நடைபெற்று இருக்கவேண்டும். ஏனினில் ஒரே நேரத்தில் நான்கு விமானங்களை கடத்துவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல இதற்கு துல்லியமான திட்டம் அவசியம் எனவும் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்களுக்கு இவ்வளவு தொழில்நுட்பம் வாய்ந்த செயலை செய்து வெற்றிபெறுவது கடினம்.

இரட்டை கோபுரங்கள் இடிந்த பகுதி மற்ற கட்டிடங்கள் சேதம் இல்லை செம காமெடி. (பார்க்க படம் : 4 & 5)

மேலும் இரட்டை கோபுரங்கள் இடிந்த விதத்தை பார்க்கும் பொழுது அது அருகாமையில் உள்ள மற்ற கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல் விமானம் மோதிய உடன் ஒரு கட்டிடத்தை வேண்டும் என்றே அழித்தால் எவ்வாறு இருக்குமோ அதுபோன்று கட்டுப்பாடுடன் அக்கோபுரங்கள் கீழே சரிந்ததை பார்க்க முடிந்தது என்றும் மேலும் மூன்றாவது கட்டிடமும் இதே போன்று விழுந்தது ஆனால் அதில் எந்த விமானமும் மோதவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் பெண்டகனை தாக்கிய விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

பெண்டகனை தாக்கிய பகுதி.. (பார்க்க படம் : 7 &

மேலும் விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் விமானத்தில் இருந்தவர்களின் உடல்கள் என்று எதுவுமே கிடைக்கவில்லை விமானம் தாக்குதலில் என்ன முழுவதுமாக ஆவியாகிவிட்டதா? என வினவியுள்ளார். கடத்தப்பட்ட நான்காவது விமானம் வெறும் தரையில் மோதியதாக கூறியுள்ளனர் அதனுடைய உதிரிப்பாகங்களோ அல்லது கருப்பு பெட்டியோ அல்லது இறந்து போன பயணிகளின் உடல்களோ கிடைக்கவில்லை. அனைத்தும் என்ன மாயமாக மறைந்து விட்டனவா? எனக் கேட்டுள்ளார். அமெரிக்க ஊடகங்கள் ஏன் இத்தாக்குதலை குறித்து மௌனம் சாதிக்கின்றன என்றும். புஷ்தான் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக பொய் கூறினார். புஷ்ஷின் குறிக்கோள் இராக்கையும் ஆப்கானிஸ்தான் மீதும் போர் தொடுப்பதே. இதனால் ஆயிரக்கணக்கான இராக்கிகள், ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்களும் இறந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் காயமுற்றுள்ளனர் மேலும் பலர் மன நோய்க்கு ஆளாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் அமெரிக்க அதிபருக்கு மனிதர்களை உயிர் மதிப்புடையது அல்ல என்று மகாதிர் முஹம்மது தெரிவித்துள்ளார்.

Saturday, 27 September 2014

சார்லி சாப்லின்

ஒருவர் நகைச்சுவை  நடிகராக இருந்தால் அவரது வாழ்க்கையும் அவ்வாறு மகிழ்ச்சியாக இருக்கும் என்று எண்ணி விட முடியாது அதற்கு நல்ல எடுத்துகாட்டு எல்லாருக்கும் தெரிந்த "சார்லி சாப்லின்".அவர்  லண்டனில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்  ,ஒன்பது வயதிலயே (வொர்க் ஹவுஸ் ) ஆதரவு அற்றோர் இல்லத்தில் தல்லப்பட்டார் .அதன் பின் மேடை நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு வாழ்க்கை நடத்தினார் .பின்பு அமெரிக்க நாடக அமைப்பு ஒன்று இவரை அமெரிக்க அழைத்து சென்று படத்தில்  நடிக்க வைத்தது .பின்பு தான் எல்லோர்க்கும் அறிமுகமானார் உலகத்தின் மிக சிறந்த நகைச்சுவை நடிகர் "சார்லி சாப்லின்"



Tuesday, 23 September 2014

மேரி க்யூரி



மேரி க்யூரி
புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார். இவர் வேதியியல் மற்றும் இயற்பியலுக்காக நோபல் பரிசை முறையே 1911, 1903 ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்.

இவரது சாதனைகளுள் முதன்மையானவை பின்வருமாறு:
கதிரியக்கம் ( இது இவர் உருவாக்கிய சொல்) பற்றிய ஓர் கோட்பாடு
கதிரியக்க ஐசோடோப்புகளை பிரித்தெடுக்கும் நுட்பங்கள், மற்றும்
இரண்டு கூறுகள்-புளோனியம் மற்றும் ரேடியம் ஆகியனவற்றை கண்டுபிடித்தல். இவரது வழிகாட்டுதலின் கீழ், உலகிலேயே முதன்முறையாக, கதிரியக்க ஐசோடோப்புகளை பயன்படுத்தி உடற்கட்டிகளை குணப்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர் பாரிஸ் மற்றும் வார்சா ஆகிய நகரங்களில் குயூரி நிறுவனங்களை உருவாக்கியுள்ளார். இவை மருத்துவ ஆராய்ச்சிக்கான முக்கிய மையங்களாக இன்று திகழ்கின்றன. முதலாம் உலகப் போரின் போது, இராணுவ துறையில் கதிரியக்க மருத்துவ மையங்களை முதன்முறையாக நிறுவினார்.

ஒரு பிரஞ்சு குடிமகளாக இருந்தபோதிலும் , மேரி ஸ்க்ளோடவ்ஸ்கா-குயூரி (இவர் இரண்டு குடும்பபெயர்களையும் பயன்படுத்தினார்), தனது போலந்து நாட்டு அடையாளத்தை இழக்கவில்லை. தனது மகள்களுக்கு போலிஷ் மொழி கற்றுதந்தார். மேலும் போலந்திற்கு அவர்களை சில முறைகள் அழைத்துச்சென்றிருக்கிறார். தான் முதன்முதலாக கண்டுபிடித்த தனிமத்திற்கு தனது தாய்நாட்டை கவரவிக்கும் வகையில் போலோநியம் என்று பெயரிட்டார்.

கியூரி ஆண்டாண்டு காலாமாக தனது ஆய்வுகளுக்காக கதிர்வீச்சின் வெளிப்பாட்டிற்கு ஆளாக்கப்பட்டதால் அப்பிலாஸ்டிக் இரத்த சோகையால், 1934 ல் இறந்தார்.


Sunday, 21 September 2014

லூடுவிக் ஃவான் பேத்தோவன்



லூடுவிக் ஃவான் பேத்தோவன்
(Ludwig van Beethoven') அவர்கள் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மேற்கத்திய செவ்விசை இயற்றுநர் ஆவார். இவர் ஜெர்மனியில் உள்ள பான் என்னும் நகரில் பிறந்தார். இவர் பியானோ கருவிக்காகவும் பிற இசைக் கருவிகளுக்காகவும் சேர்ந்திசை நிகழ்வுகளுக்காகவும் பல செவ்விசை ஆக்கங்கள் செய்துள்ளார். இவர் ஒரு சிறந்த பியானோ வாசிக்கும் கலைஞரும், வயலின் வாசிக்கும் கலைஞரும் ஆவார். இவர் ஒரு சிறந்த இசை நடத்துநராகவும் இருந்தார். இவருடைய சிம்ஃவனி என்னும் ஒத்தினி இசையில் ஐந்தாவதும் ஒன்பதாவதும் மிகவும் புகழ் பெற்றதாகும். சுமார் 1801 ஆண்டு வாக்கில் இவருக்கு சிறுகச் சிறுக காது செவிடாகத் தொடங்கியது. 1817ல் இவர் முற்றுமாய் செவிடாகிவிட்டார். எனினும் இவர் இக்காலத்தே மிகவும் சிறந்த இசை ஆக்கங்களைச் செய்துள்ளார்.

இவர் 1792ல் மேற்கத்திய இசைக்குப் புகழ் பெற்ற வியன்னா நகருக்குச் சென்று அங்கு வாழத் தொடங்கினார். இவர் திருமணமே செய்துகொள்ளவில்லை. இவர் கடைசியில் வியன்னா நகரிலேயே 1827ல் இறந்தார்.


Friday, 19 September 2014

மைக்கலாஞ்சலோ (Michelangelo)



மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி (Michelangelo di Lodovico Buonarroti Simoni, மார்ச் 6, 1475 - பெப்ரவரி 18, 1564) ஒரு இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியரும், சிற்பியும், கவிஞரும்,கட்டிடக்கலைஞருமாவார். இவர் மைக்கலாஞ்சலோஎனப் பொதுவாக அறியப்படுகிறார். இவரது கலைசார்ந்த பல்துறைத் திறமையின் உயர்ந்த தரம் காரணமாகச் சமகாலத்தவரான லியொனார்டோ டா வின்சியுடன் சேர்த்து இவரும் மறுமலர்ச்சிக் காலத் தந்தையெனக் கணிக்கப்படுகின்றார்.
மைக்கலாஞ்சலோவின் நீண்ட கால வாழ்க்கையில், அவர் படைத்தவைகள் அனைத்தும் அவரது அதிசயிக்கத்தக்க திறமைக்குச் சான்றாக அமைகின்றன. கடிதத் தொடர்புகள், வரைபடங்கள், நினைவுக் குறிப்புகள் என இவர் எழுதிக் குவித்தவை ஏராளம். இவைகளையும் சேர்த்தால், 16 ஆம் நூற்றாண்டில் அதிகமாக ஆவணப்படுத்தப்பட்ட கலைஞர் இவரே எனலாம்.



Tuesday, 16 September 2014

காதல் சுரங்கம்

உக்ரைன் கிலவன் நகரம் அருகில்  இயற்கையாக உருவான 1.8 மைல் நீளம் சுரங்கம் உள்ளது.இது அருகிலுள்ள தொழிற்சாலைக்கு தினசரி ஓடும் ஒரு ரயில் பாதையில் சுற்றி வளர்ந்தது. அங்குள்ள பூக்கள் முழுதும் மலர்ந்து இருக்கும்போது சுரங்கப்பாதை  அவ்வளவு ரம்மியமாக காட்சி அளிக்கின்றது.அதனால் இது "காதல் சுரங்கம்"என்று அறியப்படுகிறது.
உண்மையான காதலர்கள் இந்த சுரங்கத்தில் வந்து எது நினைத்தாலும் அது கண்டிப்பாக் நிறைவேறும்.

Wednesday, 3 September 2014

பாபிலோனின் தொங்கும் தோட்டம்

பாபிலோனின் தொங்கும் தோட்டம் ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக இருந்தது. அவர்கள் உள்நோக்குடன் ஈராக்கில் இன்றைய அல் ஹில்லா, பாபில் மாகாணத்தின், அருகில், பூர்வ பாபிலோன் நகரத்தில் கட்டப்பட்டன. நாங்கள் உங்களுக்கு அவர்களை பற்றி மிகவும் சுவாரஸ்யமான உண்மைகள் சில கொண்டு. கண்டுபிடிக்க படிக்க.

1.பாபிலோனின்  தொங்கும் தோட்டம் தாவரங்கள் தரை மட்டத்திலிருந்து சாகுபடி, மற்றும் மரங்களின் வேர்கள் ஒரு மேல் மாடியில் விடப்பட்டது, பூமியில் பதிக்கப்படவில்லை.

2 தொங்கும் பூங்கா 56 மைல் மொத்தம் உள்ளது.

3.தோட்டங்களில் 3 கோட்டைகள் மற்றும் கோயில்கள் திட தங்கத்தாலான சிலைகள் கொண்டிருக்கின்றன.

4 நேபுகாத்நேச்சார் 43 ஆண்டுகளாக பாபிலோன் நகரத்தை ஆண்டுவந்தார்.



Monday, 1 September 2014

சில்லரைகள்

ஒரு பைசாவிற்கு கூட 1 சதவீதம் மதிப்பு இருக்கிறது ஆனால் அது செய்ய எவ்வளவு  செலவாகும் என்பதைப் ப்ற்றி காண்போம்.
சில்லறைகள் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள் 97.5% துத்தநாகம், மற்றும் 2.5% காப்பர் அடிக்கடி ஏற்ற இறக்கம் இருக்கும்.துத்தநாகத்தின் விலை ஏற்றத்தால் பைசா உற்பத்தி செலவு 2005 ல் .97 சென்ட் 2007 ல் 1.7 சென்டுகள் வரை உயர்ந்துள்ளது.

Sunday, 31 August 2014

பெய்லி பிரிட்ஜ்

பாலம் என்றால் ஒரு ஆற்றின் குறுக்கே கட்டபடுவது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று .அதை கட்டுவது என்பது சுலபமான காரியம் இல்லை .ஆனால்   "பெய்லி பிரிட்ஜ் " கட்டுவது என்பது சுலபமான காரியம். அவை வேறு இடத்தில் கட்டப்பட்டு பின் குறிபிட்ட இடத்தில் பொருத்தப்படுகின்றன .இவைகள் பெரிய பெரிய இயந்திரங்களின் உதவியை நாடுவது இல்லை .உலகின் உயரமான பெய்லி லடாக்கில் 1982 ஆம் ஆண்டு கட்டப்பட்டது .
இந்த பிரிட்ஜ்  இந்திய இராணுவத்தினரால் கட்டப்பட்டது 

Saturday, 30 August 2014

செஞ்சிக் கோட்டை

சத்ரபதி சிவாஜி அவர்களால்  "இந்தியாவின் மிக வலுவான கோட்டை" என்றும் பிரிட்டிஷ் அரசால் "கிழக்கு டிராய்" என்றும்  பெயரிடப்பட்ட  கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செஞ்சி  கோட்டை ஆகும்.இக்கோட்டை ஆனது முதன்முதலில் 9ஆம் நூற்றாண்டில் ஆனந்த கோனர் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.பின்பு 12ஆம் நூற்றாண்டில் சோழ மன்ன்ர்களால் கட்டிமுடிக்கபட்டது.இது மூன்று மலைகளில்மீது அமைந்துள்ளது.இது 800 அடி உயரத்தில் கட்டப்பட்டது.இக்கோட்டையை பாதுகாக்க கோட்டையைச் சுற்றி 80 அடி அகல அகழி உள்ளது.
இதில் ஏழு அடுக்கு கல்யாண மண்டபமும்,களஞ்சியமும்,சிறைச் செல்களும் அமைந்துள்ளது.அதுமட்டுமின்றி  செஞ்சி அம்மனுக்கு ஒரு கோவிலும் உள்ளது.
1660-1677 ஆகிய காலகட்டத்தில் இக்கோட்டையை பிஜாபூர் நவாப் ஆண்டுவந்தனர்.அப்போழுது இதற்கு பட்ஸாபாத் என்று பெயர்.அதன்பின் மராத்தாஸ் சண்ட்ரி(chandry) அல்லது சிண்டி(chindy) என்று அழைத்தனர்.1968ல் முகலாயர்கள் இதனை நுஸ்ரத்காத் என்று அழைத்தனர்.கடைசியாக ஆங்கிலேயர்கள் மற்றும் பிரஞ்சுகாரர்கள் இதனை செஞ்சி அல்லது  ஜிஞ்சி என்றனர்.



குதுப் மினார்

குதுப் மினார், தில்லியில் 72.5 மீட்டர்கள் (237.8 அடி) உயரம் கொண்ட கோபுரமாகும். மேலும் செங்கல்லால் செய்த உலகிலேயே உயர்ந்த பள்ளி வாயில் தூபி இதுவே ஆகும். இந்தியாவின் முதல் முஸ்லீம் அரசரான குத்துப்புத்தின் ஐபக் ஆணையிட்ட படி, இந்த தூபியின் கட்டிடப்பணி 1193 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது, இந்த தூபியின் மிகவும் உயரத்திலான தளம் 1386 ஆம் ஆண்டில் பிரோஸ் ஷா துக்ளக் மேற்பார்வையில் கட்டிமுடிக்கப்பெற்றது. குதுப் மினார் என்பது இந்திய-இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு மிகவும் புராதனமான எடுத்துக்காட்டாக பெயர் பெற்றதாகும். இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு அதன் தொடக்க மற்றும் மிகப் பிரசித்தி பெற்ற எடுத்துக்காட்டுகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக குதுப் மினார் திகழ்கின்றது.


Thursday, 28 August 2014

திமிங்கிலம் (Whale)

திமிங்கிலம் நீரில் வாழும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இதன் ஒரு வகையான நீலத் திமிங்கிலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது. திமிங்கிலங்கள் வெப்ப இரத்தப் பிராணிகளாகும். இவை நுரையீரல் மூலமே மூச்சுவிடுகின்றன.இவை வெப்ப இரத்த விலங்குகள். திமிங்கிலங்களில் 75 வகைகள் உள்ளன. உலகிலுள்ள உயிரினங்களுள் மிகப்பெரியதாக வளரக்கூடிய இனம் நீலத் திமிங்கிலம் ஆகும். இது சற்றேறக்குறைய 100 அடி நீளமும் 150 டன் எடையுள்ளதாகவும் வளரக்கூடியது. நீலத் திமிங்கிலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்கும். இத்தகைய திமிங்கிலத்திடம் மூர்க்கமான குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை ஆகும்.

திருப்பதி

இந்தியாவிலேயே  மிகபெரிய  வழிபாட்டுதலம்  ஆந்திராவில் உள்ள திருப்பதி ஆகும்.இதுவே உலகில் உள்ள மிகபெரிய  விஸ்ணு  ஆலயம்  ஆகும்.இங்கு தினமும் 30000க்கு மேற்ப்பட்ட மக்கள்  சுவாமி தரிசனம்  செய்கின்றன்ர்.கிட்டதட்ட நாள்  ஒன்றிர்க்கு  6 அமேரிக்க டாலர்கள்  நங்கொடையாக வருகின்றது.

Tuesday, 26 August 2014

தேசிய கொடி

நமது தேசிய கொடியை 1947ல் உருவாக்கபட்டது அல்ல.நமது தேசிய கொடி உருவான வரலாற்றை பற்றி காண்போம்:
இந்தியாவின் முதல் தேசிய கொடி கொல்கத்தா இப்போது கல்கத்தாவில் பார்சி பாகன் சதுக்கத்தில் (கிரீன் பார்க்), ஆகஸ்ட் 7, 1906 பறக்கவிடப்பட்டது என்று கூறப்படுகிறது.
இரண்டாவது கொடி 1907 ஆம்  ஆண்டு மேடம் காமாவ மற்றும் அவரது நாடுகடத்தப்பட்ட புரட்சியாளர்கள் படையினால் பாரிசஸில் பறக்கவிடப்பட்டது.
மூன்றாவது கொடி 1917ல் நமது அரசியல் போராட்டத்தின்  போது  டாக்டர் அன்னி பெசன்ட் மற்றும் லோகமான்ய திலகர் ஹோம் ரூல் இயக்கத்தை தோற்றுவித்தபோது  பறந்தது.
1921 இல் பெஸ்வாடாவில்  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றபோது (இப்போது விஜயவாடா) பிங்காலி வெங்கையா ஒரு கொடி தயாரித்து  காந்திஜியிடம் கொண்டுசென்றார். அது இரண்டு நிறங்கள் சிவப்பு மற்றும் பச்சை பிரதிநிதித்துவப்படுத்தும்  விதமாக செய்யப்பட்டது,அதாவது இரு பிரதான சமூகங்கள் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் . காந்திஜி தேசத்தின் முன்னேற்றதின் சின்னமாக  சுழலும் சக்கரம் மீதமுள்ள பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வெள்ளை துண்டு கூடுதலாக பரிந்துரைத்தார்.
1931ஆண்டு நமது கொடியின் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். ஒரு தீர்மானம்  இதுதான் எங்கள் தேசிய கொடி என்று ஒரு வர்ணம் கொடி ஏற்றுக்கொண்ட நிறைவேற்றப்பட்டது. இந்த கொடி, தற்போதுள்ள ஸாஃப்ரான், வெள்ளை,பச்சை மற்றும் மையத்தில் மகாத்மா காந்தியின் சுழலும் சக்கரம்  இருந்தது. இது, எனினும், தெளிவாக இல்லை இனவாத முக்கியத்துவத்தை பெற்றதால் விளக்கம் வேண்டும் என்று கூறினார்.
ஜூலை 22, 1947 அன்று, அரசியல் நிர்ணய சபை சுதந்திர இந்திய தேசிய கொடி ஏற்கப்பட்டது. சுதந்திர வருகைக்கு பின், வண்ணங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை அதே இருந்தது. மட்டும் அசோக சக்கரவர்த்தியின் தர்ம ராட்டினம் கொடி சின்னமாக சுழலும் சக்கரம் இடத்தில் ஏற்கப்பட்டது. இதனால், காங்கிரஸ் கட்சி மூவர்ணக் கொடியை இறுதியில் சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியை மாறியது.



Monday, 25 August 2014

சாய்ந்த கோபுரம்

பைசா நகரின் சாய்ந்த கோபுடரத்தின் எடை 14500 டன் ஆகும்.இதை  கட்டி முடிக்க கிட்டதட்ட 800 ஆண்டுகள் ஆனது.இது வெரும் 55.86 மீ மட்டுமே உயரம் கொண்டது.800 ஆண்டுகள் ஆனதர்க்கு காரண்ம் இடையில் 100 ஆண்டுகள் கட்டாமல் கிடப்பில் போடபட்டது.இந்த கோபுரத்தில் மொத்தம் 286 படிகட்டுகள் உள்ளது.

Saturday, 23 August 2014

பவளப் பாறைகள் (Coral Reefs)



பவளப் பாறைகள் (Coral Reefs)
என்பவை கடலினுள் பவளம் எனப்படும் ஒரு உயிரினத்தால் சுரக்கப்படும் கல்சியம் கார்பனேட்டினால் உருவாகின்றன. பெரும்பாலும் இவை காணப்படும் பகுதி பூமத்தியரேகைக்கு கீழே உள்ள வெப்ப நாட்டு கடல் பகுதிகளும், பசிபிக் பெருங்கடலும் ஆகும். இந்தியாவில், அந்தமான் தீவுகளிலும், லட்சத் தீவுகளைஓட்டிய கடல் பகுதிகளிலும் இவை காணக்கிடைக்கின்றன.
பவளப்பாறைகளில் கண்டத்திட்டுப் பவளப்பாறைகள், தடுப்புப் பவளப்பாறைகள், வட்டப் பவளத்திட்டுகள் என மூன்று வகைகள் உள்ளன.

பசிபிக் பெருங்கடலில் பல அழகான வண்ணங்களில் பவளப்பாறைகள் அமைந்துள்ளன. இவை பச்சை, கருஞ்சிவப்பு, பழுப்பு, மஞ்சள் முதலான நிறங்களில் காணப்படுகின்றன. மேலும் இவை பல்வேறு கடல் உயிரினங்கள் வாழ்வதற்கான இடமாகவும் இருக்கின்றன.

ஜெல்லி மீன்

உலகிலையே அதிகம் விஷத்தன்மை உடையது மீன் வகையை சார்ந்த "ஜெல்லி மீன் " ஆகும் ... இவை பார்பதற்கு அழகாக இருக்கும் ஆனால் இதனுடைய விஷம் ஆனது மனிதனை மூன்று நிமிடங்களில் கொள்ளக் கூடியது...இவை இரையை பிடிக்க  டெண்டக்கல்ஸ்("TENTACLES") ஐ பயன்படுத்துகின்றன.....யாவை ஆஸ்திரேலியா கடல் பகுதியில் தான் அதிகம் காணப்படுகின்றன ....

Friday, 22 August 2014

கனவுகள்

மனித மூளை பல சிக்கலான படைப்புகளைப் பெற்று இருக்கிறது. ஆனால் அது மக்கள் படத்தை கண்டுபிடிக்க முடியாது.எனவே நீங்கள் உங்கள் கனவுகளில் சந்திக்கின்ற"அந்நியர்களுக்கு" உண்மையில் நீங்கள்  உங்கள் வாழ்வில் ஒருமுறையாவது பார்த்திருக்க கூடும்.ஆனால் அவர்களின் முகம் உங்களுக்கு மறந்திருக்ககூடும்.
உண்மையில், ஒரு சமீபத்திய ஆய்வில், இன்னும் ஒவ்வொரு கனவு ஆரம்பத்தில் விழித்துக்கொண்ட மாணவர்கள், அனைத்து அனுபவம் சிரமம் மூன்று நாட்கள் இடைவெளியில், எரிச்சல், பிரமைகள், மற்றும் உளப்பிணி அறிகுறிகள் கவனமின்மை, தூக்கம் ஆகியவற்றால் பாதிக்கபட்டனர்.
அவர்கள் REM தூக்கம் அனுமதிக்கப்பட்டபோது, அவர்களின் மூளை REM நிலையில் கழித்த தூக்கம் சதவீதம் அதிகரித்தது.பல மக்கள் தங்கள் கனவுகளில் இருந்து உத்வேகம் ஈர்த்துள்ளன.


Thursday, 21 August 2014

மின்காந்த நிழற்பட்டை (Electromagnetic spectrum)



இருக்ககூடிய அனைத்து மின்காந்த கதிர்வீச்சின் விபரிப்பே மின்காந்த நிழற்பட்டை (Electromagnetic spectrum) ஆகும். மின்காந்த கதிர்வீச்சுக்களை அதன் அலைநீளம் அல்லது அலையெண் கொண்டு விபரிக்கலாம். மின்காந்த நிழற்பட்டை நுண்ணிய அலைநீளத்தில் இருந்து மிக நீண்ட அலைநீள மின்காந்த கதிர்வீச்சுக்களை உள்ளடக்கும்.

· காம்மா அலைகள் (1010 - 1013 GHz)
· ஊடு கதிர் அலைகள் (108 - 109 GHz)
· புற ஊதா கதிர்கள் (106 - 108 GHz)
· ஒளி அலைகள் (105 - 106 GHz)
· அகச்சிவப்புக் கதிர்கள் (103 - 104 GHz)
· நுண்ணலைகள் (3 – 300 GHz)
· வானொலி அலைகள் (535 kHZ - 806 MHz)


Wednesday, 20 August 2014

இந்திய ராணுவத்தின் தந்தை

இந்தியாவின்  முதல் ஜனாதிபதி யார் என்றெலாம் தெரிந்து வைத்து இருக்கிறோம் . ஆனால் நம்மை இரவும் பகலுமாக அயராது பாடுபட்டு காத்துகொண்டு இருக்கும்  இந்திய ராணுவத்தின் முதல் ராணுவ தளபதி யார் என்று தெரியுமா ??...ஜெனரல் கே. எம் .கரியப்பா ...அவர் பிறந்த ஊர் மைசூர்....வெளிநாட்டு பிரஜைகளும் வணங்கும் நபராக திகழ்ந்த அவர் மீளும் திறனும் நித்திய தேச பற்றும் கொண்ட நபர் .. இதனாலயே மக்கள் இவரை "கிப்பர் " என்று அன்போடு அழைத்தனர் ... பல வகையில் அவர்  கௌவரிவிக்க பட்டாலும் கடைசி வரை எளிமையாகவே வாழ்ந்தார்..சுதந்திரத்துக்கு பிறகு ராணுவத்துக்கு அவரது பங்களிப்பு முக்கியமாக கருதபட்டது ....அவரே "இந்திய ராணுவத்தின் தந்தை" என்று அழைக்க படுகிறார் ....



Tuesday, 19 August 2014

தாமரைக் கோயில்

தாமரைக் கோயில் (Lotus temple) என்பது இந்தியாவில் தில்லியில் உள்ள பஹாய் வழிபாட்டுத்தலம் ஆகும். அதன் தாமரை மலர் போன்ற வடிவத்தின் காரணமாக தாமரைக் கோயில் என அறியப்படுகிறது. பஹாய் வழிபாட்டுத்தலம் டெல்லியின் வசீகரமான இடமாக உள்ளது. 1986 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இது இந்தியத் துணைக்கண்டத்தின் தாய்க் கோயிலாகக் கருதப்படுகிறது. இது எண்ணற்ற கட்டடக்கலை விருதுகளை வென்றுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான செய்தித்தாள் மற்றும் நாளிதழ் கட்டுரைகளில் தனித்தன்மையுடன் வெளிவந்துள்ளது. அதன் புறப்பரப்பு வெள்ளைப் பளிங்கினால் உருவாக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத்தளமும் அதனைச் சூழ்ந்துள்ள ஒன்பது தூண்களும், தோட்டங்களும் 26 ஏக்கர் (105,000 m²; 10.5 ha) நிலப்பரப்பில் அமைந்துள்ளன. நாட்டின் தலைநகரமான டெல்லியில் உள்ள பாஹாபூர் என்ற கிராமத்தில் இந்த இடம் உள்ளது. இதனைக் கட்டிய கட்டடக்கலை நிபுணர் ஃபாரிபோர்ஸ் சாபா ஒரு ஈரானியர் ஆவார்.